பதிவு செய்த நாள்
18 ஜன2022
10:22
நிரந்தர வைப்புத் தொகை
வங்கிகளில் நிரந்தர வைப்புத் தொகை முதலீட்டுக்கு, வருமான வரி சட்டம் ‘80சி’ பிரிவின் கீழ், வரிச் சலுகை வழங்கப்படுவதை, மூன்று ஆண்டுகள் என்ற அளவுக்கு குறைக்க வேண்டும் என, வங்கிகள் தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்சமயம், 1.50 லட்சம் ரூபாய் வரையிலான, ஐந்து ஆண்டுகளுக்கான வங்கியின் நிரந்தர வைப்புத் திட்டத்துக்கு, 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகை வழங்கப்படுகிறது.
ஆப்பிள் ஏற்றுமதி அதிகரிப்பு
நாட்டின் ஆப்பிள் ஏற்றுமதி, கடந்த 2014- – 15 ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2020 – 21ல், 82 சதவீதம் அளவுக்கு அதிகரித்திருப்பதாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.அதேசமயம், இக்காலகட்டத்தில் பழங்களின் இறக்குமதி 3.8 சதவீதம் அளவுக்கு மட்டுமே அதிகரித்திருப்பதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி மேம்படும்
கொரோனா தொற்று தொடர்பான பிரச்னைகள் மற்றும் உலகளாவிய சிக்கல்கள் இருந்தபோதிலும், அடுத்த 12 மாதங்களில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என, உலகளவிலான தலைமை செயல் அதிகாரிகளிடம் எடுத்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆலோசனை நிறுவனமான பி.டபுள்யு.சி.,உலகளவில் 89 நாடுகளில் உள்ள, 4,446 தலைமை செயல் அதிகாரிகளிடம் எடுத்த ஆய்வில், இவ்வாறு தெரியவந்துள்ளது.
பணி அமர்த்தல் அதிகரிப்பு
நபர்களை பணியில் அமர்த்துவது, கடந்த டிசம்பர் மாதத்தில், அதற்கு முந்தைய மாதத்தைவிட 2 சதவீதம் அதிகரித்துள்ளது என, ‘மான்ஸ்டர் டாட் காம்’ நிறுவன ஆய்வு தெரிவித்துள்ளது.சில்லரை வணிகம் மற்றும் வேளாண் அடிப்படையிலான துறைகளில் தேவைகள் அதிகரித்ததை அடுத்து, அதிக எண்ணிக்கையிலான நபர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
சர்க்கரை ஏற்றுமதி உயர்வு
நாட்டின் சர்க்கரை ஏற்றுமதி, கடந்த டிசம்பர் காலாண்டில், நான்கு மடங்கு அதிகரித்து, 17 லட்சம் டன் ஆக உயர்ந்துள்ளதாக, இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் தெரிவித்துள்ளது.மேலும், நடப்பு மாதத்தில் மட்டும், கிட்டத்தட்ட 7 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்படுவதற்கு தயாராக இருப்பதாகவும், இந்த சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|