பதிவு செய்த நாள்
27 ஜன2022
21:40
மும்பை:பங்குச் சந்தைகளில் அண்மைக்காலமாக எளிதாக பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தவர்களுக்கு, இப்போது கடினமான ஒன்றாக மாறி வருகிறது.
நேற்று பங்குச் சந்தைகள் சரிவைக் கண்டதை அடுத்து, முதலீட்டாளர்கள், கிட்டத்தட்ட 3 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்து உள்ளனர்.நேற்று காலை 11மணி வாக்கில், மும்பை பங்குச் சந்தையில், 'சென்செக்ஸ்' பிரிவில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு, 262.78 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது, 258.77 லட்சம் கோடி ரூபாயாக சரிந்தது.நேற்றைய தினம், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 581 புள்ளிகள் சரிவைக் கண்டது.
இதேபோல், தேசிய பங்குச் சந்தையின் 'நிப்டி'யும் 168 புள்ளிகள் சரிவைக் கண்டது. சென்செக்ஸ் பிரிவில், எச்.சி.எல்., டெக் நிறுவனம், அதிகபட்சமாக 4.17 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டது.அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்திருக்கும் நிலையில், பெடரல் வங்கி, வட்டி விகிதத்தில் எந்த மாறுதலையும் செய்யவில்லை என அறிவித்துள்ளது.
ஆனாலும், பெடரல் வங்கியின் தலைவர் ஜெரோம் பாவெல், வட்டிவிகிதம் மார்ச் மாதத்தில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.இதன் தொடர்ச்சியாக, இந்திய சந்தைகளில் பாதிப்பு ஏற்பட்டு, சந்தை சரிவைக் கண்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|