பதிவு செய்த நாள்
08 பிப்2022
10:36
புதுடில்லி : ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் கார் தயாரிப்பதில், அரசு ஆர்வமாக இருப்பதாக ‘நிடி ஆயோக்’ தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் கூறியுள்ளார்.
உலகின் மிகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிறுவனம், மின்சார கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.பட்ஜெட் குறித்த கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்ற அமிதாப் காந்திடம், டெஸ்லா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது அவர் கூறியதாவது:
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் நுழைவதற்கு எந்தவித தடையும் இல்லை. அரசின் தற்போதைய கொள்கை முடிவுகள், அந்நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலையை துவங்க அனுமதிப்பதாக உள்ளது. ஆனால், அரசாங்கம் விரும்புவது என்னவென்றால், நாம் எதற்கு அனுமதி வழங்கினாலும், அது இந்தியாவின் உற்பத்தியுடன் இணைக்கப்பட வேண்டும் என்பது தான். சீன அரசாங்கம் அதைத் தான் செய்தது.
எனவே, டெஸ்லாவிடம், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள் என்று கூறுகிறோம்.உற்பத்தியை துவங்க தேவையானவற்றை வழங்கவும்; அந்நிறுவனத்துக்கு ஆதரவளிக்கவும் இந்தியா தயாராக இருக்கிறது.
நம் நாட்டில், இரு விதமான வரி இருக்கிறது. ஒன்று, ஆடம்பர வாகனங்களுக்கான 110 சதவீத வரி. இன்னொன்று, இந்தியாவில் அசெம்பிள் செய்யும்பட்சத்தில், 60 சதவீத வரி.இதில் எதை வேண்டுமானாலும் டெஸ்லா முடிவு செய்துகொள்ளலாம். இருப்பினும், இந்தியாவில் உற்பத்தி செய்வதில், அரசு ஆர்வமாக இருக்கிறது.டெஸ்லாவுடன் தொடர்ந்து பேச்சு நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|