ரிசர்வ் வங்கி கூட்டம் இன்று துவங்குகிறது ரிசர்வ் வங்கி கூட்டம் இன்று துவங்குகிறது ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘டெஸ்லா’ ஆலை துவங்குவதில் அரசு ஆர்வமாக இருக்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 பிப்
2022
10:36


புதுடில்லி : ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் கார் தயாரிப்பதில், அரசு ஆர்வமாக இருப்பதாக ‘நிடி ஆயோக்’ தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் கூறியுள்ளார்.

உலகின் மிகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிறுவனம், மின்சார கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.பட்ஜெட் குறித்த கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்ற அமிதாப் காந்திடம், டெஸ்லா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது அவர் கூறியதாவது:
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் நுழைவதற்கு எந்தவித தடையும் இல்லை. அரசின் தற்போதைய கொள்கை முடிவுகள், அந்நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலையை துவங்க அனுமதிப்பதாக உள்ளது. ஆனால், அரசாங்கம் விரும்புவது என்னவென்றால், நாம் எதற்கு அனுமதி வழங்கினாலும், அது இந்தியாவின் உற்பத்தியுடன் இணைக்கப்பட வேண்டும் என்பது தான். சீன அரசாங்கம் அதைத் தான் செய்தது.

எனவே, டெஸ்லாவிடம், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள் என்று கூறுகிறோம்.உற்பத்தியை துவங்க தேவையானவற்றை வழங்கவும்; அந்நிறுவனத்துக்கு ஆதரவளிக்கவும் இந்தியா தயாராக இருக்கிறது.

நம் நாட்டில், இரு விதமான வரி இருக்கிறது. ஒன்று, ஆடம்பர வாகனங்களுக்கான 110 சதவீத வரி. இன்னொன்று, இந்தியாவில் அசெம்பிள் செய்யும்பட்சத்தில், 60 சதவீத வரி.இதில் எதை வேண்டுமானாலும் டெஸ்லா முடிவு செய்துகொள்ளலாம். இருப்பினும், இந்தியாவில் உற்பத்தி செய்வதில், அரசு ஆர்வமாக இருக்கிறது.டெஸ்லாவுடன் தொடர்ந்து பேச்சு நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)