பதிவு செய்த நாள்
03 மார்2022
19:54
மும்பை:ரிசர்வ் வங்கி, பணவீக்கம் குறித்த எதிர்பார்ப்பு, நுகர்வோர் நம்பிக்கை ஆகியவை குறித்த அடுத்த கட்ட ஆய்வை துவங்கி உள்ளது.
வட்டி விகிதங்கள் குறித்த முடிவை, ரிசர்வ் வங்கி அதன் பணக்கொள்கை குழு கூட்டத்தின் வாயிலாக விவாதித்து அறிவிப்பது வழக்கம். நாட்டின் சில்லரை விலை பணவீக்கத்தின் அடிப்படையில், வட்டி விகிதங்களில் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.
இந்த முடிவை எடுப்பதற்கு வசதியாக, மக்களிடம் பணவீக்கம் மற்றும் நுகர்வு நம்பிக்கை ஆகியவை குறித்து, ரிசர்வ் வங்கி பல கட்டங்களில் ஆய்வுகளை மேற்கொள்ளும்.இதன்படி, தற்போது ரிசர்வ் வங்கி ஆய்வை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வு 13 நகரங்களில், கிட்டத்தட்ட 6 ஆயிரம் குடும்பங்களிடம் மேற்கொள்ளப்பட உள்ளது.
இவர்களிடம் பணவீக்கம் குறித்த கேள்விகளுடன், பொதுவான பொருளாதார சூழ்நிலை, வேலைவாய்ப்புகள், விலைவாசி, குடும்பத்தினரின் வரவு – செலவு உள்ளிட்டவை குறித்தும் கேள்விகள் கேட்டு, அறியப்படும். ரிசர்வ் வங்கியின் அடுத்த பணக் கொள்கை குழு, ஏப்ரல் 6, 8ம் தேதிகளில் கூடி, வட்டி குறித்த முடிவுகளை அறிவிக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|