பதிவு செய்த நாள்
26 ஏப்2022
01:35
புதுடில்லி : குழந்தைகளுக்கான மருத்துவமனைகளை நடத்தி வரும், ‘ரெயின்போ சில்ரன்ஸ் மெடிகேர்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, நாளை துவங்குகிறது.நாளை துவங்கும் இந்த புதிய பங்கு வெளியீடு, 29ம் தேதியுடன் முடிவடைகிறது.
பங்கு வெளியீட்டின் வாயிலாக இந்நிறுவனம் கிட்டத்தட்ட 2,000 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.பங்கு வெளியீட்டின் போது, 280 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும்; பங்குதாரர்கள் மற்றும் நிறுவனர்கள் வசம் இருக்கும் 2.4 கோடி பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.திரட்டப்படும் நிதியை, புதிய மருத்துவமனைகளை அமைக்கவும்; புதிய மருத்துவ சாதனங்களை வாங்கவும்; பொதுவான நிர்வாக செலவுகளுக்கு பயன்படுத்தவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது
.இந்நிறுவனம், அதன் முதல் மருத்துவமனையை 1999ம் ஆண்டு, ஐதராபாத்தில் துவங்கியது.கடந்த ஆண்டு டிசம்பர் நிலவரப்படி, இந்நிறுவனத்துக்கு 6 நகரங்களில், 14 மருத்துவமனைகளும்; 3 கிளினிக்குகளும் உள்ளன. குழந்தைகள் சிகிச்சைக்காக மொத்தம் 1,500 படுக்கை வசதி கொண்டதாக இந்நிறுவனம் உள்ளது.பிரிட்டனை சேர்ந்த நிதி நிறுவனமான சி.டி.சி., குழுமத்தின் பின்னணியில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|