வர்த்தக துளிகள்வர்த்தக துளிகள் ...  ‘டுவிட்டர்’ ஒப்பந்தம்தடை போட்ட மஸ்க் ‘டுவிட்டர்’ ஒப்பந்தம்தடை போட்ட மஸ்க் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘விரைவில் சரியாக வாய்ப்பில்லை’ பணவீக்கம் குறித்து எஸ்.பி.ஐ.,
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மே
2022
21:39


மும்பை : நாட்டில் பணவீக்கம் அதிகரித்திருக்கும் நிலையில், இதற்கு முக்கிய காரணம், உக்ரைன் போர் பாதிப்புகள் தான் என்றும்; பணவீக்க உயர்வு விரைவில் சரியாக வாய்ப்பில்லை என்றும் எஸ்.பி.ஐ., தெரிவித்துள்ளது.

மேலும் ரிசர்வ் வங்கி, ஆகஸ்ட் மாதத்துக்குள் 0.75 சதவீதம் வட்டியை உயர்த்த கூடும் என்றும் தெரிவித்துள்ளது. எஸ்.பி.ஐ., பொருளாதார ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டு உள்ளதாவது:

உயர்ந்துள்ள பணவீக்கத்தில் குறைந்தபட்சம் 59 சதவீத அதிகரிப்பு, உக்ரைன் மீதான போரால் ஏற்பட்ட புவிசார் அரசியல் பாதிப்புகளால் உருவானது தான்.கடந்த ஏப்ரலில் பணவீக்கம் 7.8 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில், இதை கட்டுப்படுத்தும் வகையில், ஆகஸ்ட் மாதத்துக்குள் மேலும் 0.75 சதவீதம் அளவுக்கு, ‘ரெப்போ’ வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்த வாய்ப்பிருக்கிறது.


உக்ரைன் போர் குறித்து ஆராய்ந்ததில், விலையேற்றத்தில் 59 சதவீதம், போரின் விளைவுகளால் ஏற்பட்டவை என தெரிய வந்துள்ளது. குறிப்பாக, பிப்ரவரி மாத பணவீக்கத்தை அடிப்படையாக ஒப்பிட்டு பார்க்கும்போது, உணவு, பானங்கள், எரிபொருள், மின்சாரம், போக்குவரத்து ஆகியவற்றின் விலையேற்றத்தில் 52 சதவீதம், போரால் ஏற்பட்டதாகும் என்பதை அறிய முடிந்தது.நாட்டின் பணவீக்க உயர்வு, விரைவில் சரியாவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே தோன்றுகிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)