பதிவு செய்த நாள்
18 மே2022
20:36
புதுடில்லி,–----புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, 3 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது,
பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி!’ ‘பெடரல் பேங்க்’ துணை நிறுவனமான ‘பெடரல் பைனான்ஷியல் சர்வீசஸ்’ விமான நிலையை சேவைகள் தளமான ‘டிரீம்போல்க்ஸ் சர்வீசஸ்’ மற்றும் சிறப்பு கடல் ரசாயன தயாரிப்பாளரான ‘ஆர்க்கியன் கெமிக்கல்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ ஆகிய 3 நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதியை பெற்றுள்ளன.
இந்நிறுவனங்கள், கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் செபிக்கு விண்ணப்பித்திருந்தன.விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதாக செபி அறிவித்துவிட்ட நிலையில், விரைவில் இந்நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டுக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிறுவன பங்குகள், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளன.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|