நாடுகளின் தலைவர்கள் கையில் உலக பொருளாதார வளர்ச்சிநாடுகளின் தலைவர்கள் கையில் உலக பொருளாதார வளர்ச்சி ... ஒன் பிளஸ் நார்டு சிஇ 2லைட் 5ஜி மற்றும் ஒன் பிளஸ் நார்டு பட்ஸ் அறிமுகம் ஒன் பிளஸ் நார்டு சிஇ 2லைட் 5ஜி மற்றும் ஒன் பிளஸ் நார்டு பட்ஸ் அறிமுகம் ...
கிராமப்புற சேவைக்கு பிரத்தியேக கவனம் செலுத்தும் எச்டிஎப்சி வங்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2022
18:20

எச்டிஎப்சி வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாரதத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் நெருக்கமாக சென்று சேவைகளை வழங்கும் நோக்கில், தமது கிராமப்புற வங்கி சேவைகளை தனியாக பிரித்து வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இவ்வங்கி ஏற்கனவே மேற்கொண்ட முன்னெடுப்புகளைக் கொண்டே கிராமப்புற வங்கி சேவைகளுக்கு பிரத்தியேக கவனம் செலுத்தவுள்ளதாகவும், இதன் மூலம் தமது வங்கி சேவைகளை நாட்டின் கடைமடை பகுதிகளுக்கு எடுத்துச் செல்வது சாத்தியமாகி உள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளது.

ரீடெயில் கிளைகள் மூலம் வங்கி சேவைகளை வழங்குவது என்பது இந்த வங்கியின் ‘எதிர்காலத்திற்கு தயாராக இருக்கும் தொலைநோக்கு’ திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. பெரும்பாலும் சேவை கிடைக்கப்படாத ‘நகரங்களை ஒட்டிய பகுதிகள்’ மற்றும் கிராமப்புற பகுதிகளில் வழங்கப்படும் வங்கி சேவைகளில் சிறப்பு கவனம் செலுத்துவதே இத்திட்டன் நோக்கமாகும்.

இந்த கிராமப்புற வங்கி சேவைகளின் மூலம் ‘நகர்புறங்களை ஒட்டிய பகுதிகள்’ மற்றும் கிராமப்புற பகுதிகளில் பல்வேறு வகையான நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகளை முழுமையாக வழங்கவுள்ளது. இந்நோக்கில் வங்கியானது கிராமப்புறங்களில் தற்போதுள்ள தமது விநியோக முறைகளை விரிவாக்கம் செய்வதற்காக, இந்த நிதியாண்டில், நகர்புறங்களை ஒட்டிய பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் 1064-க்கும் அதிகமான கிளைகளைத் திறக்க இவ்வங்கி திட்டமிட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த எச்டிஎப்சி வங்கியின், சீனியர் எக்சிக்யூட்டிவ் வைஸ் பிரசிடென்ட் அணில் பவ்னானி கூறுகையில், “இது ஒரு சவாலான முன்னெடுப்பாகவும், அதே நேரம் ஒரு நல்வாய்ப்பாகவும் உள்ளது. இதனை வழிநடத்துவது குறித்து நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். பல ஆண்டுகளாக தற்போது வரை, எங்கள் வங்கியின் கிளைகளில் 50% நகர்புறங்களை ஒட்டிய பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களிலேயே செயல்பட்டு வருகிறது. இப்போது பிரத்தியேக சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம், நகர்புறங்களை ஒட்டிய பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் இந்த நிதியாண்டில் நாங்கள் மேலும் பல புதிய கிளைகளைத் துவங்கவுள்ளோம். எங்களது கிளைகள் நேரடியாக அணுகக்கூடிய வகையில் இருப்பதால், இப்பகுதிகளின் சந்தைக்கு ஏற்ப பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகளை உருவாக்கி, கிராமப்புற தேவைகளை முழுமையாக நிவர்த்தி செய்யத் திட்டமிட்டுள்ளோம்”, என்று கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)