ஆயுத போட்டி வரக்கூடும்  ஆயுத போட்டி வரக்கூடும் ... ரஷ்யாவில் முடங்கி கிடக்கும்இந்தியாவின் ரூ.1,000 கோடி ரஷ்யாவில் முடங்கி கிடக்கும்இந்தியாவின் ரூ.1,000 கோடி ...
‘ஆன்லைன்’ வர்த்தக தளங்களில் அதிகரிக்கும் போலி மதிப்பீடுகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2022
02:49


புதுடில்லி : மின்னணு வர்த்தக நிறுவனங்களில் இடம் பெறும், போலியான மதிப்பீடுகள் மற்றும் விமர்சனங்களிலிருந்து நுகர்வோரை பாதுகாக்கும் வகையில், புதிய செயல்பாட்டு வழிமுறை திட்டத்தை கொண்டு வர இருப்பதாக, நுகர்வோர் விவாகாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


பொதுவாக, மின்னணு வர்த்தக நிறுவனங்களில் பொருட்களை ‘ஆர்டர்’ செய்யும் நுகர்வோர், தாங்கள் வாங்க இருக்கும் பொருட்களின் தரம், மதிப்பீடு உள்ளிட்டவை குறித்து, பிறர் என்ன தெரிவித்துள்ளனர் என்பதை அறிய விரும்புவர்.அவர்கள் வாங்க இருக்கும் பொருட்களுக்கு, மற்றவர்கள் நல்ல விமர்சனமும், தரமதிப்பும் கொடுத்திருக்கும்பட்சத்தில், நம்பி, அப்பொருட்களை வாங்க முன்வருவார்கள்.இந்நிலையில், போலியான மதிப்பீடுகளும், விமர்சனங்களும் அதிகரித்து, பலர் அதை நம்பி வாங்கி, ஏமாற்றம் அடைவதாகவும் நுகர்வோர் தரப்பிலிருந்து புகார்கள் அதிகரித்துள்ளன.


இதையடுத்து, நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம், மின்னணு வர்த்தக நிறுவனங்களுடன் இப்பிரச்னை குறித்து, கடந்த வெள்ளியன்று விவாதித்தது.இந்த சந்திப்புக்கு பின், இப்பிரச்னையை தீர்க்கும் வகையில், புதிதாக ஒரு செயல்பாட்டு வழிமுறை திட்டத்தை கொண்டுவர இருப்பதாக அமைச்சகம் தெரிவித்து உள்ளது.இது குறித்து அமைச்சரக அதிகாரி ஒருவர் கூறியதாவது:


முதற்கட்டமாக நிறுவனங்களிடம் இது குறித்த செயல்முறை வழிகாட்டு திட்டம் எதுவும் இருக்கிறதா என ஆய்வு செய்தோம். பின், நாம் வழிகாட்டு திட்டத்தை அறிமுகம் செய்வதன் வாயிலாக, போலியான விமர்சனங்களை தடுக்க முடியுமா என்பது குறித்தும் ஆராய்ந்தோம். அனைவரது கருத்துக்களையும் கேட்டு உள்ளோம்.நுகர்வோர் தினசரி பயன்படுத்தக்கூடிய ஒரு விஷயத்தில், போலிகள் இருக்கக் கூடாது என்பதில் அரசு கண்டிப்பாக இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)