பதிவு செய்த நாள்
01 ஜூன்2022
20:46
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், நாட்டின் ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவைகள் வரி வாயிலாக, 1.41 லட்சம் கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.
இது குறித்து, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:கடந்த மே மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.41 லட்சம் கோடி ரூபாயாகும். இது, கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது 44 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு மே மாதத்தில் 97 ஆயிரத்து, 821 கோடி ரூபாய் வசூல் ஆகியிருந்தது.
இருப்பினும், கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, இது குறைவாகும். கடந்த ஏப்ரலில் வரலாற்று சாதனை அளவாக 1.68 லட்சம் கோடி ரூபாய் வசூலாகி இருந்தது.இதற்கு முந்தைய மார்ச்சில், 1.42 லட்சம் கோடி ரூபாய் வசூலாகி இருந்தது. வரி வசூலை பொறுத்த வரை, ஜி.எஸ்.டி., அறிமுகம் ஆனதிலிருந்து, நான்காவது மாதமாக 1.40 லட்சம் கோடி ரூபாயை தாண்டி, மே மாதத்தில் வசூல் ஆகியுள்ளது.இவ்வாறு நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|