பதிவு செய்த நாள்
10 நவ2010
08:50
நியூயார்க் : அமெரிக்க அரசு அந்நாட்டின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் வகையில் 60,000 கோடி டாலரை (ரூ.27 லட்சம் கோடி) புழக்கத்தில் விட்டுள்ளது. இதனையடுத்து டாலர் புழக்கம் அதிகரித்துள்ளதால், இதர நாட்டு செலாவணிகளுக்கு எதிராக அமெரிக்க டாலரின் வெளிமதிப்பில் சென்ற வாரத்தில் கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவிற்கு கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க டாலரின் வெளிமதிப்பு சரிவடைவதால் தங்கம், வெள்ளி, தாமிரம் போன்ற உலோகங்கள் கோதுமை உள்ளிட்ட உணவு பொருள்கள் போன்றவற்றை இறக்குமதி செய்வதற்கான செலவினம் குறைந்துவிடும். இதனால் இவற்றின் பயன்பாடு அதிகரிக்கும். எனவே சர்வதேச அளவில் முன்பேர சந்தைகளில் இவற்றின் விலை கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. மேலும் சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலையும் கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|