பதிவு செய்த நாள்
09 மார்2011
08:57
புளூம்பெர்க் : சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு, சர்வதேச அளவில் பவர் டிரான்ஸ்மிசன் கியர் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஏபிபி லிமிடெட் நிறுவனம், இந்தியாவில் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் பொருட்டு, முதலீட்டை 67 சதவீதம் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த, ஏபிபி லிமிடெட் நிறுவனத்தின் இந்திய அங்கத்தின் இயக்குனர் பிரகாஷ் நாயக் கூறியதாவது, 2010ம் ஆண்டில், தங்கள் நிறுவனம் டிரான்ஸ்மிசன், டிஸ்டிரிபியூசன் மற்றும் ஜெனரேசன் பணிளுக்காக, 420 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்திருந்தது. தற்போது, இந்தியாவில் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் பொருட்டு, முதலீட்டை 67 சதவீதம் அதிகரித்து இந்தாண்டில், 700 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|