பதிவு செய்த நாள்
10 மார்2011
00:00
புதுடில்லி: சென்ற டிசம்பர் மாதத்தில், கடல் உணவு பொருள்கள் ஏற்றுமதி 20 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில், இவற்றிற்கான தேவைப்பாடு அதிகரித்ததை தொடர்ந்து, ஏற்றுமதியும் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டதாக, கடல் உணவு பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்ற டிசம்பர் மாதத்தில், 26 கோடி டாலருக்கு (1,196 கோடி ரூபாய்) கடல் உணவு பொருள்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த 2009ம் ஆண்டின், இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட 20 சதவீதம் அதிகம். கடந்த 2009ம் ஆண்டின் இதே மாதத்தில், 22 கோடி டாலருக்கு (1,012 கோடி ரூபாய்) ஏற்றுமதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில், இறால், நண்டு, மீன் ஆகியவற்றுக்கான தேவை, நல்ல அளவில் இருந்தது. இதையடுத்து, இந்நாடுகளுக்கு கடல் உணவு பொருள்கள் அதிகளவு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.நாட்டிலிருந்து, கடல் உணவு பொருள்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு 26 சதவீதமும், அமெரிக்காவுக்கு 17 சதவீதமும், ஜப்பானுக்கு 20 சதவீதமும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|