பதிவு செய்த நாள்
10 மார்2011
14:50
புதுடில்லி : அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு, சர்வதேச அளவில் கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஃபோர்டு நிறுவனத்தின் இந்திய அங்கமான ஃபோர்டு இந்தியா நிறுவனம், தங்கள் நிறுவன முத்தாய்ப்பான தயாரிப்பான பிகோ கார் ஏற்றுமதியை, மேலும் சிலநாடுகளில் விரிவுபடுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த ஃபோர்டு இந்தியா நிறுவன தலைவரும் மற்றும் நிர்வாக இயக்குனருமான மைக்கேல் போன்ஹாம் கூறியதாவது, தங்கள் நிறுவனத்தின் பிகோ கார், இந்திய மக்களிடையே மட்டுமல்லாது, சர்வதேச அளவில் பெரும்வரவேற்பை பெற்றுள்ளது. மெக்சிகோ நாட்டிற்கு ஏற்றுமதியை துவக்கிய தாங்கள், தற்போது தென் ஆப்ரிக்கா மற்றும் நேபாள நாடுகளுக்கு காரை ஏற்றுமதி செய்து வருகிறோம். இந்த ஏற்றுமதியை, மேலும் பல நாடுகளுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். இதன்படி வடக்கு ஆப்ரிக்கா, கரீபியன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்றுமதி மேற்கொள்ள உள்ளோம். இதுமட்டுமல்லாது, 2015ம் ஆண்டிற்குள், புதிய 8 மாடல் கார்களை அறிமுகப்படுத்த உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|