பதிவு செய்த நாள்
11 மார்2011
00:25
- திருமை.பா.ஸ்ரீதரன் - பரஸ்பர நிதி நிறுவனங்களின் முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு, முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப, யூனிட்டுகள் வழங்கப்படுகின்றன. துவக்க காலத்தில் இந்த யூனிட்டுகள் பத்திர வடிவில் இருந்தன. ஆனால், தற்போது இவை, 'அக்கவுண்ட் ஸ்டேட்மென்ட்' என்ற வகையில், விவர அறிக்கையாக வழங்கப்படுகின்றன. இந்த விவர அறிக்கையில், யூனிட்தாரருடைய பெயர், முகவரி, நியமனதாரர் பெயர், முதலீட்டாளருடைய வங்கி கணக்கு எண், முதலீட்டு தொகை, யூனிட்டுகளின் எண்ணிக்கை, ஒரு யூனிட்டின் மதிப்பு (Nஅங) உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளன.அப்படிவத்தின் கீழ் பகுதியில், 'டிரான்சாக்ஷன் ஸ்லிப்' என்ற படிவமும் இருக்கும். முதலீட்டாளர், யூனிட்டுகளை விற்க விரும்பினாலோ, ஒரு திட்டத்திலிருந்து மற்றொரு திட்டத்திற்கு மாற விரும்பினாலோ அல்லது கூடுதலாக யூனிட்டுகளை வாங்க விரும்பினாலோ, அந்த படிவத்தை பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட பரஸ்பர நிதி நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும். முதலீட்டாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அந்த பரஸ்பர நிதி நிறுவனம், உடனடியாக அதுகுறித்து நடவடிக்கை எடுக்கும். ஒரு பரஸ்பர நிதி நிறுவனத்தை நிர்வகிப்பதற்கு, தொழில் துறை, மூலதனச் சந்தை, பங்குச் சந்தை உள்ளிட்ட துறைகளில் தகுதியும், அனுபவமும் உள்ள தொழில் வல்லுனர்கள், அந்நிறுவனத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும். ஒரு பரஸ்பர நிதி நிறுவனத்தின் அறங்காவலர்களில் (கூணூதண்tஞுஞுண்) 40 சதவீதத்தினர், அந்த நிறுவனத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லாத, அதேசமயம், அத்துறையில் நிபுணத்துவம் பெற்ற வெளிநபர்களாக இருக்க வேண்டும்.ஒரு பரஸ்பர நிதி நிறுவனம், அதன் திட்டங்களின் வாயிலாக திரட்டிய தொகையை, நிறுவனங்களின் பங்குகள், கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும். மேலும், குறுகிய கால அடிப்படையில் 'மணி மார்க்கெட்' எனப்படும் நிதிச் சந்தைகளிலும் முதலீடு செய்யலாம். ஆனால், அதன் மொத்த நிதியிலிருந்து 25 சதவீத அளவிற்கே நிதிச் சந்தையில் முதலீடு செய்து, அசலுடன், வட்டியையும் திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும். அதேசமயம், புதிய திட்டத்தின் வாயிலாக நிதி திரட்டிக் கொள்ளும் ஒரு பரஸ்பர நிதி நிறுவனம், அந்த நிதியிலிருந்து முதல் ஆறு மாதத்திற்கு 25 சதவீதத்திற்கும் அதிகமாக, நிதிச் சந்தையில் முதலீடு செய்ய வழிவகை உள்ளது.பொதுவாக, பரஸ்பர நிதி நிறுவனங்கள், அவற்றின் சொந்த உபயோகம் தவிர, அசையா சொத்துக்களில் முதலீடு செய்யக் கூடாது. ஆனால், அசையா சொத்துக்களில் முதலீடு செய்யும் வகையில் திரட்டப்படும் பரஸ்பர நிதி திட்டங்களுக்கு, இந்த விதி பொருந்தாது. இருப்பினும், வீட்டு வசதிக்கு நிதி உதவியளிக்கும் நிறுவனங்களின் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|