பதிவு செய்த நாள்
11 மார்2011
00:27
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், வியாழக்கிழமையன்று மிகவும் மோசமாக இருந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால், ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம், சுணக்கம் கண்டது. இது, இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. பங்கு வர்த்தகம் ஒரு நாள் உயர்வதும், மறுநாள் குறைவதும் என்ற நிலையில் உள்ளது.வியாழக்கிழமையன்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், ரியல் எஸ்டேட் துறை பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவைப்பாடு இருந்தது. ஆனால், தகவல் தொழில்நுட்பம், மோட்டார் வாகனம், உலோகம், நுகர்பொருள்கள், மின்சாரம், எண்ணெய், எரிவாயு என பல துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் குறைந்திருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 141.97 புள்ளிகள் சரிவடைந்து, 18,327.98 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 18,430.84 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 18,261.26 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 21 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், 9 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 36.60 புள்ளிகள் குறைந்து, 5,494.40 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,516.30 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,468.45 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|