சர்வதேச அளவில் விரிவாக்கத்தில் ஈடுபடுகிறது ருசி குழுமம்சர்வதேச அளவில் விரிவாக்கத்தில் ஈடுபடுகிறது ருசி குழுமம் ... நடப்பு 2010 - 11ம் நிதியாண்டில்உணவு தானியங்கள் உற்பத்தி 23 கோடி டன்னாக இருக்கும் நடப்பு 2010 - 11ம் நிதியாண்டில்உணவு தானியங்கள் உற்பத்தி 23 கோடி டன்னாக ... ...
நடப்பு 2011ம் காலண்டர் ஆண்டில்ஐ.டி. துறைகளில் 2 லட்சம் பேருக்கு வேலை:ரூ.3.29 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மார்
2011
02:52

புதுடில்லி:சர்வதேச அளவில், உலகின் பல முன்னணி நாடுகள் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளன. இதனால், நம் நாட்டின் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயல்பாடு நன்கு உள்ளது. இதனையடுத்து, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பணிகளை வெளியிலிருந்து நிறைவேற்றி தரும் பீ.பி.ஓ. போன்ற துறைகளில், நடப்பு 2011ம் காலண்டர் ஆண்டில், நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றோர் எண்ணிக்கை 2 லட்சத்து 25 ஆயிரமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாண்டில், இத்துறை நிறுவனங்களின் வாயிலான வருவாயும் 7,170 கோடி டாலராக (3 லட்சத்து 29 ஆயிரத்து 820 கோடி ரூபாய்) அதிகரிக்கும் என, டெலாய்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட அமெரிக்காவைக் காட்டிலும், ஐரோப்பா மற்றும் இதர ஆசிய நாடுகளிலிருந்து, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, அதிக வருவாய் கிடைக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பாண்டில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பீ.பி.ஓ. சேவை துறைகளின் வாயிலான மொத்த வருவாய் என்பது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.8 சதவீதமாக இருக்கும்.தகவல் தொழில்நுட்பம் மற்றும் சாப்ட்வேர் சேவை துறைகளில், பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை, 22 லட்சத்து 30 ஆயிரமாக உயரும்.ஆக, நடப்பாண்டில் கூடுதலாக 2 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், மறைமுகமாக கூடுதலாக 80 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நம் நாட்டில், தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணியில் உள்ள இன்போசிஸ், டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், உள்ளிட்ட பல நிறுவனங்கள், இவ்வாண்டு மிக அதிகளவில் பணியாளர்களை தேர்வு செய்ய இருப்பதாக தெரியவந்துள்ளது.தகவல் தொழில்நுட்ப துறையில், ஏற்பட்டுள்ள எழுச்சி நிலையால் 2011ம் காலண்டர் ஆண்டில், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் செயல்பாடும் நன்கு இருக்கும் என இந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. மதிப்பீடு செய்யப்பட்டுள்ள மொத்த வருவாயில், (7,170 கோடி டாலர்) முக்கிய சாப்ட்வேர் மற்றும் சேவை துறைகளின் வருவாய் 6,000 கோடி டாலராக (2 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய்) இருக்கும் என்றும், இத்துறை நிறுவனங்களின் ஏற்றுமதி 17 சதவீதம் வளர்ச்சி கண்டு 4,700 கோடி டாலராக (2 லட்சத்து 16 ஆயிரத்து 200 கோடி ரூபாய்) அதிகரிக்கும் என டெலாய்ட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)