நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் நிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரி அதிகரிப்புநடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் நிறுவனங்கள் செலுத்திய ... ... ஜப்பானில் அணு உலைகள் வெடித்ததால்பீ.எஸ்.இ. 'சென்செக்ஸ்' 272 புள்ளிகள் வீழ்ச்சி ஜப்பானில் அணு உலைகள் வெடித்ததால்பீ.எஸ்.இ. 'சென்செக்ஸ்' 272 புள்ளிகள் ... ...
பாரத ஸ்டேட் வங்கி: ரூ. 20,000 கோடிக்கு உரிமை பங்கு வெளியீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மார்
2011
01:31

மும்பை:பொதுத்துறையைச் சேர்ந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.) அதன் பங்குதாரர்களுக்கு, உரிமைப் பங்குகளை வெளியிட்டு 20 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த உரிமை பங்கு வெளியீடு, வரும் 2011-12ம் நிதியாண்டின், முதல் காலாண்டில், இருக்கும் என தெரிகிறது. இவ்வங்கியின் தலைவர் ஓ.பி.பட், இதன் துணை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலாவின் 1,000 ஆவது கிளையை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:பாரத ஸ்டேட் வங்கி, அதன் விரிவாக்க நடவடிக்கைகள் மற்றும் மூலதன தேவையை அதிகரித்து கொள்வதற்காக, உரிமை பங்கு வெளியீட்டை மேற்கொள்ள உள்ளது. தற்போது, இவ்வங்கியில், மத்திய அரசு 59 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டுள்ளது. எனவே, மத்திய அரசின் ஒப்புதலுக்கு பிறகு, இந்த வெளியீடு மேற்கொள்ளப்படும். உரிமை பங்குகள் வெளியிடும் நிலையில், அதிகளவு பங்கு மூலதனத்தை கொண்டுள்ள மத்திய அரசும், இப்பங்கு வெளியீட்டில் பங்கேற்க வேண்டும். அரசு அனுமதிக்கும் நிலையில், அதன் பங்கு மூலதன அளவு, தற்போதைய அளவிலேயே தொடரும்.இதற்கு முன்பாக, பாரத ஸ்டேட் வங்கி, கடந்த 2008ம் ஆண்டு உரிமை பங்கு வெளியீட்டின் மூலம், 16 ஆயிரத்து 736 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டது. இதனையடுத்து அப்போது, வங்கியின் மூலதன இருப்பு விகிதம் 14 சதவீதமாக அதிகரித்திருந்தது.இவ்வங்கி, சென்ற மாதம் 2,000 கோடி ரூபாயை திரட்டிக் கொள்ளும் வகையில், கடன் பத்திர வெளியீட்டை மேற்கொண்டது. இக்கடன் பத்திரங்கள் வேண்டி, முதலீட்டார்களிடமிருந்து 8.5 மடங்கிற்கும் அதிகமாக விண்ணப்பங்கள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வங்கி, வரும் 2011-12ம் நிதியாண்டில், புதிதாக 5,000 பேரை வேலைக்கு தேர்வு செய்ய உள்ளது. இதற்கான பணிகள், வரும் நிதி ஆண்டின், மத்தியில் இருக்கும். இவ்வாறு பட் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)