பதிவு செய்த நாள்
17 மார்2011
00:36
திருச்சி: மெகா மார்ட் நிறுவனம், நடப்பு நிதியாண்டில் 430 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.ஜவுளி மற்றும் ஆடைகள் தயாரிப்பு துறையில் ஈடுபடும் அர்விந்த் நிறுவனத்தின் துணை நிறுவனமாக மெகா மார்ட் விளங்குகிறது. திருச்சியில் 20 ஆயிரம் சதுரடி பரப்பளவில், பெரிய ÷ஷாரூம் ஒன்றை துவங்கி வைத்து, அர்விந்த் ரீடெய்ல் நிறுவனத்தின் துணை தலைவர் (சில்லறை வர்த்தகம்) சதீஷ் பட் பேசியதாவது:சென்ற 2009-10ம் நிதியாண்டில், இந்நிறுவனம், 260 கோடி ரூபாயை வருவாயாக பெற்றிருந்தது. இந்நிறுவனம் ஆண்டுக்கு 50 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. இதையடுத்து, நடப்பு 2010-11ம் நிதியாண்டியில் நிறுவனத்தின் வருவாய் 430 கோடி ரூபாயாக அதிகரிக்கும்.நிறுவனம், நாட்டின் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அதற்கேற்ப, அதிக எண்ணிக்கையில் ÷ஷாரூம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது, தமிழகத்தில் 49 சில்லறை அங்காடிகள் செயல்படுகின்றன. அண்மையில் காரைக்காலில் ஒரு புதிய அங்காடி துவங்கப்பட்டது.இந்நிறுவனத்திற்கு சென்னை, புனே, தானே, பெங்களூரு போன்ற நகரங்களில் மிகப்பெரிய ÷ஷாரூம்கள் உள்ளன. வரும் ஏப்ரல் 15ம் தேதி, புனேயில் மேலும் ஒரு ÷ஷாரூம் துவங்கப்பட உள்ளது. இவ்வாறு சதீஷ் பட் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|