பதிவு செய்த நாள்
17 மார்2011
15:20
புதுடில்லி : கடந்த 10 ஆண்டுகளில் தங்கள் நிறுவனம், இந்திய தபால் துறையுடன் இணைந்து 6.5 பி்ல்லியன் அமெரிக்க டாலர்கள் பணப் பரிமாற்றம் செய்துள்ளதாக, வெஸ்டர்ன் யூனியன் மணி டிரான்ஸ்பர் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தி்த்த வெஸ்டர்ன் யூனியன் மணி டிரான்ஸ்பர் (தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள்) நிர்வாக இயக்குனர் அனில் கபூர் கூறியதாவது, இந்திய தபால் துறை, 1,55,000 ஊழியர்களை தன்னகத்தே கொண்டு, சர்வதேச அளவில் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. தங்கள் நிறுவனம், 200 நாடுகளில் 4 லட்சத்திற்கும் அதிகமான முகவர்களை வைத்து பணப்பரிமாற்ற சேவையை செய்து வருகிறோம். சர்வதேச அளவில் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய தபால் துறையுடன் சேர்ந்து தாங்கள் இந்த அரிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறோம். இந்தியாவில் ஏற்ப்டடுள்ள முன்னேற்றமான பொருளாதார சூழ்நிலை மற்றும் நடுத்தர வகுப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ள பொருளாதார முன்னேற்றம் போன்ற காரணங்களினாலேயே இந்த சாதனை நிகழ்ந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|