பதிவு செய்த நாள்
17 மார்2011
16:50
புதுடில்லி : டீசல், சமையல் எரிவாயு (எல்பிஜி கேஸ்) மற்றும் மண்ணெண்ணெயை அரசு நிர்ணயித்த விலையில் விற்பனை செய்வதால், தங்களுக்கு நாளொன்றுக்கு 238 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவன உயர் அதிகாரி கூறியதாவது, தங்கள் நிறுவனம், டீசல் விற்பனை செய்வதன் மூலம் மட்டும், நாளொன்றுக்கு ரூ. 156 கோடி இழப்பை சந்தித்து வருவதாகவும், மத்திய அரசு, விலையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அரசிற்கு வேண்டுகோளும் விடுத்துள்ளார். அரசின் இந்த விலை நிர்ணயத்திற்கு தாங்கள் மட்டும் பாதிக்கப்படாமல், தங்களுடைய துணை நிறுவனங்களான இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தாங்கள் விற்பனை செய்வதன் மூலம் பெறப்படும் வருமானம், இறக்குமதி செலவை விட குறைவாக இருப்பது என்பது வேதனைக்குரிய விசயம் என்றும், டீசலில் மட்டும் தங்களுக்கு லி்ட்டருக்கு ரூ. 15.79 இழப்பு ஏற்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|