நாளொன்றுக்கு ரூ. 238 கோடி இழப்பு : இந்தியன் ஆயில் கார்‌ப்பரேசன்நாளொன்றுக்கு ரூ. 238 கோடி இழப்பு : இந்தியன் ஆயில் கார்‌ப்பரேசன் ... உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் 9.42 சதவீதமாக குறைந்தது உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் 9.42 சதவீதமாக குறைந்தது ...
பரஸ்பர நிதி நிறுவனங்களின் பங்கு சார்ந்த முதலீட்டு திட்டங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2011
00:14

- திருமை. பா. ஸ்ரீதரன் - பரஸ்பர நிதி நிறுவனங்கள், பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யும் வகையில், பல்வேறு வகையான திட்டங்களை கொண்டுள்ளன. இதற்கு பங்கு சார்ந்த முதலீட்டுத் திட்டங்கள் (ஈக்யூட்டி பேஸ்டு பண்டுகள்) என்று பெயர். பரஸ்பர நிதி நிறுவனங்கள், காலவரையறையுடன் கூடிய பரஸ்பர நிதி திட்டங்கள் (இடூணிண்ஞு ஞுணஞீஞுஞீ) மற்றும் காலவரையறை இல்லாத பரஸ்பர நிதி திட்டங்கள் (Oணீஞுண ஞுணஞீஞுஞீ) மூலம், நிதி திரட்டி, அதை நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்கின்றன. பொதுவாக, பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளில் செய்யப்படும் முதலீடு, சற்று இடர்பாட்டுக்கு உட்பட்டவை என்றாலும், பங்கு சார்ந்த முதலீட்டு திட்டங்களின் வாயிலாக, முதலீட்டாளர்களுக்கு அதிக வருவாய் கிடைக்கும். பரஸ்பர நிதி நிறுவனங்களில், மூலதனச் சந்தை மற்றும் பங்குச் சந்தைகளில் நிபுணத்துவம் பெற்ற வல்லுனர்கள் உள்ளனர். இவர்கள், பங்குச்சந்தையின் நிலவரத்திற்கு ஏற்ப, எந்த நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வது, அதிக ஆதாயத்துடன் எப்போது பங்குகளை விற்பனை செய்வது என்பதை, துல்லியமாக கணக்கிட்டு வைத்திருப்பர். எனவே, மிகவும் அசாதாரண சூழ்நிலைகளில் மட்டுமே, இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இருப்பினும், பரஸ்பர நிதி நிறுவனங்களின், பங்கு சார்ந்த முதலீடு என்பது, மிகவும் பரவலாக அமைந்திருக்கும். எனவே, ஒரு சில நிறுவனப் பங்குகளின் விலை உயர்வை பயன்படுத்தி, பரஸ்பர நிதி நிறுவனங்கள் ஆதாயம் பெற்று விடும். பங்கு சார்ந்த முதலீட்டு திட்டத்தின் கீழ், பரஸ்பர நிதி நிறுவனங்கள், 'ஈக்யூட்டி டைவர்சிபைடு, இன்டெக்ஸ் பண்டு' (பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் முதலீட்டு திட்டங்கள்), ஈ.எல்.எஸ்.எஸ்., எனப்படும் 'ஈக்யூட்டி லிங்க்டு சேவிங் ஸ்கீம்ஸ்' (வருமான வரி விலக்கு பெறுவதற்கான முதலீட்டு திட்டம்) போன்றவை, இப்பிரிவின் கீழ் வருகின்றன. பரஸ்பர நிதி திட்டங்களின் கீழ், எக்சேஞ் டிரேடடு பண்டு (ஈ.டி.எப்.), பிக்சட் மெச்சூரிட்டி பிளான் (எப்.எம்.பி.), மன்த்லி இன்கம் பிளான் (எம்.ஐ.பி.), பண்டு ஆப் பண்ட்ஸ் போன்றவையும் உள்ளன.மேலும், முதலீட்டாளர்கள், தங்கள் விருப்பம் போல், பரஸ்பர நிதி திட்டங்களின் கீழ் முதலீட்டை மேற்கொள்ளும் வகையிலும், பல்வேறு வசதிகள் உள்ளன. அதாவது, சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி. - மாதா மாதம் செலுத்தும் வகை), ஒன் டைம் அல்லது பல்க் இன்வெஸ்ட்மென்ட் (குறிப்பிட்ட அளவிற்கான ஒரு பெருந்தொகையை முதலீடு செய்வது), சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்பர் பிளான் (எஸ்.டி.பி. - ஒரு திட்டத்திலிருந்து மற்றொரு திட்டத்திற்கு மாற்றிக் கொள்வது), சிஸ்டமேட்டிக் வித்டிராயல் பிளான் (எஸ்.டபிள்யூ.பி. - திட்டத்திலிருந்து வெளியேறுவது), குரோத், டிவிடெண்டு பிளான் (மறு முதலீடு, டிவிடெண்டை பெற்றுக் கொள்வது) என்பது போன்ற வசதிகளையும், முதலீட்டாளர்கள் பரஸ்பர நிதி திட்டங்களின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)