சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஏற்றுமதி 47 சதவீதம் வளர்ச்சிசிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஏற்றுமதி 47 சதவீதம் வளர்ச்சி ... பங்கு சந்தை நிலவரம் பீ.எஸ்.இ. 'சென்செக்ஸ்' 209 புள்ளிகள் சரிவு பங்கு சந்தை நிலவரம் பீ.எஸ்.இ. 'சென்செக்ஸ்' 209 புள்ளிகள் சரிவு ...
பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2011
00:21

புதுடில்லி: நாட்டின் பணவீக்கம் மற்றும் உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் உயர்ந்து வருவதை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், ரிசர்வ் வங்கி, நடப்பு நிதியாண்டின், மத்திய காலாண்டிற்கான கடன் கொள்கையை அறிவித்துள்ளது. இதில், குறுகிய கால அடிப்படையில், வங்கிகளுக்கான முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம், வங்கிகள், ரிசர்வ் வங்கியில், வைக்க வேண்டிய ரொக்க இருப்பு விகிதத்தில் (6 சதவீதம்), மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இதில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும், கடனுக்கான 'ரெப்போ' வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தி, 6.75 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும், ரிசர்வ் வங்கி, வங்கிகளிடமிருந்து வாங்கும் கடனுக்கான, 'ரிவர்ஸ் ரெப்போ ' வட்டி விகிதத்தையும், 0.25 சதவீதம் அதிகரித்து 5.75 சதவீதமாக உயர்த்தியுள்ளது. நாட்டின் பணவீக்கம், உயர்ந்து வருவதை தடுத்து நிறுத்திடும் வகையில், ரிசர்வ் வங்கி, சென்ற 2010ம் ஆண்டு மார்ச் முதல் இதுவரையிலுமாக, எட்டு முறை, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. ரிசர்வ் வங்கியின் கவர்னர் டீ. சுப்பாராவ், வியாழக்கிழமையன்று வெளியிட்டுள்ள, நிதிக் கொள்கையில், அறிவிக்கப்பட்டுள்ள வங்கி கடன்களுக்கான வட்டி விகித உயர்வு, சந்தை மதிப்பீட்டை ஒட்டியே உள்ளது. சென்ற பிப்ரவரி மாதத்தில்,நாட்டின் தொழில் துறை உற்பத்தி 3.7 சதவீதம் குறைந்த அளவிலேயே வளர்ச்சி கண்டுள்ளது. அதேசமயம், சென்ற 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 16.8 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக, தயாரிப்புத் துறையில், பொறியியல் துறையின் வளர்ச்சி குறைந்ததையடுத்து, நாட்டின் தொழில்துறை உற்பத்தி குறைந்து போயுள்ளது. சென்ற பிப்ரவரி மாதத்தில் மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும், நாட்டின் பொது பணவீக்கம் 8.31 சதவீதமாக அதிகரித்திருந்தது. இது, சென்ற ஜனவரி மாதத்தில், 8.23 சதவீதம் என்ற அளவில் குறைந்து காணப்பட்டது. நடப்பு மார்ச் மாத இறுதியில் பணவீக்கம் 8 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. முன்பு இது, 7 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. சென்ற 2010ம் ஆண்டு உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் 20 சதவீதம் என்ற அளவில், மிகவும் அதிகரித்து காணப்பட்டது. இது, தற்போது 9.52 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது என்றாலும், இது, மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் மதிப்பீட்டை விட அதிகம் என கருதப்படுகிறது. ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியுள்ளதை அடுத்து வீட்டு வசதி மற்றும் மோட்டார் வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் மேலும் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானின் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் அந்நாடு மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில், அணு உலைகள் வெடிப்பாலும் அதிக இடர்பாடு ஏற்பட்டுள்ளது. ஜப்பானில் ஏற்பட்டுள்ள இயற்கை சீற்றத்தால், உருவாகியுள்ள நெருக்கடி நிலை, இந்தியப் பொருளாதாரத்தில் எந்த அளவிற்கு, தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து, தற்போது கருத்து தெரிவிக்க இயலாது. இருப்பினும், ஜப்பான் நாட்டின் அரசும், அந்நாட்டின் மத்திய வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால், அந்நாடு விரைந்து இயல்பு நிலைக்கு திரும்பும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.ஜப்பான் நாட்டின் அணு உலைகள் வெடிப்பால், மின் உற்பத்தி தடைப்பட்டுள்ளது. அதனை ஈடு செய்ய, ஜப்பான் அரசு அனல் மின் உற்பத்தி திட்டங்கள் வாயிலாக, மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.இதனால், சர்வதேச அளவில், பெட்ரோலிய பொருள்களின் விலை உயர வாய்ப்புள்ளது. ஜப்பான் நாட்டின் மத்திய வங்கியான பேங்க் ஆப் ஜப்பான், அந்நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில், 4,300 கோடி டாலரை (ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 800 கோடி ரூபாய்) புழக்கத்திற்குவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், உள்நாட்டில், பெட்ரோலிய பொருள்களின் விலை உயரக்கூடும் என்ற அச்சப்பாடு உள்ளது. இதனால், இதரப் பொருள்களின் விலையும் அதிகரிக்கக்கூடும். எனவே, ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், வரும் ஏப்ரல் மாதத்தில் அதன் நிதி, ஆய்வறிக்கையில், வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை மேலும் உயர்த்தக்கூடும் என சந்தை வட்டாரத்தினர் கருத்து தெரிவித்தனர்.இதுகுறித்து தனியார் துறை வங்கியின் உயரதிகாரி ஒருவர் கூறும்போது, ' ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வு சந்தை மதிப்பீட்டை ஒட்டியே உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படாமல், பணவீக்கத்தை குறைப்பதற்கு, இது தான் வழி. பணவீக்கத்தை பொறுத்து, ரிசர்வ் வங்கி, வரும் நிதியாண்டில், இக்கடன் விகிதத்தை 0.50 -0.75 சதவீத அளவிற்கு உயர்த்தக்கூடும்' என்று தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)