பதிவு செய்த நாள்
18 மார்2011
15:34
கோல்கத்தா : நடப்பு நிதியாண்டில் மார்ச் 12ம் தேதி வரையிலான கணக்கெடுப்பில் நாட்டின் வரி வசூல் வருமானம் 26 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆண்டு இறுதியில் எட்டப்படும் என அரசு எதிர் பார்த்த வரி வசூல் தொகை, முன்னதாகவே எட்டி உள்ளது. இது முந்தைய ஆண்டின் வரிவசூலை விட அதிகம் என வருவாய்த்துறை செயலர் சுனில் மித்ரா தெரிவித்துள்ளார். நேரடி மற்றும் மறைமுக வரிகள் மூலம் அதிக தொகை வசூலாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மறைமுக வரி மூலம் 92 சதவீதமும், நேரடி வரி மூலம் 79 சதவீதமும் வசூலாகி உள்ளது. மறைமுக வரி மூலம் ரூ.3,15,000 கோடி கிடைக்கும் என அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் மொத்தம் ரூ.3,36,000 கோடி வசூலாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுங்க வரி 62 சதவீதமும், கலால் வரி 35 சதவீதமும், சேவை வரி 21 சதவீதமும் வசூலாகி இருப்பதாக வருவாய்த்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|