அன்னிய நிதி நிறுவனங்கள்இந்திய பங்குச் சந்தைகளில் ரூ.2,484 கோடி முதலீடுஅன்னிய நிதி நிறுவனங்கள்இந்திய பங்குச் சந்தைகளில் ரூ.2,484 கோடி முதலீடு ... கதிர்வீச்சு அபாயம்: சீனாவில் உப்பு விற்பனை அமோகம் கதிர்வீச்சு அபாயம்: சீனாவில் உப்பு விற்பனை அமோகம் ...
நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மொபைல் போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 1.47 கோடி உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மார்
2011
01:21

புதுடில்லி:இந்தியாவில், மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்ற பிப்ரவரி மாதத்தில் மட்டும், ஜி.எஸ்.எம்., மொபைல் போன் சேவையில், புதிதாக ஒரு கோடியே 47 லட்சம் வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். இத்தொழில்நுட்பத்தில், இச்சேவையை பெறும் ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, பிப்ரவரி மாதம் வரையிலுமாக, 55 கோடியே 51 லட்சமாக உயர்ந்துள்ளது. உள்நாட்டில், மொபைல் போன் சேவையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள், ஜி.எஸ்.எம்., மற்றும் சி.டி.எம்.ஏ., தொழில்நுட்பத்தில் மொபைல் சேவையை வழங்கி வருகின்றன. ஜி.எஸ்.எம்., தொழில்நுட்பத்தில், சேவையை பெறும் வாடிக்கையாளர்கள், தங்களது மொபைல் போனில், எந்த ஒரு நிறுவனத்தின் 'சிம் கார்டை'யும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதே சமயம், சி.டி.எம்.ஏ., தொழில்நுட்பத்தில், நிறுவனம் வழங்கும் மொபைல் போன் மற்றும் 'சிம் கார்டை' மட்டுமே பயன்படுத்தி, உபயோகிக்க முடியும்.சென்ற ஜனவரி மாதத்தில், ஜி.எஸ்.எம்., தொழில்நுட்பத்திலான மொபைல்போன் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 54 கோடியே 4 லட்சமாக இருந்தது. இதில், டாட்டா டெலி சர்வீசஸ் நிறுவனத்தின் டாட்டா டொகொமோ மற்றும் ரிலையன்ஸ் டெலி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் ஜி.எஸ்.எம்., மொபைல்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை. உள்நாட்டில், ஜி.எஸ்.எம்., தொழில்நுட்ப சேவையில், பார்த்தி ஏர்டெல் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. சென்ற பிப்ரவரி மாதத்தில், இந்நிறுவனத்தின் ஜி.எஸ்.எம்., மொபைல் போன் சேவையில், புதிதாக 32 லட்சம் வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர்.இதையடுத்து, இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 15 கோடியே 90 லட்சமாக அதிகரித்துள்ளது. இத்தொழில்நுட்பத்தில், பிப்ரவரி மாதம் வரையிலுமாக, இதன் சந்தை பங்களிப்பு 28.65 சதவீதமாக உள்ளது.வோடபோன் எஸ்ஸார் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, சென்ற பிப்ரவரி மாதத்தில், கூடுதலாக 35 லட்சத்து 50 ஆயிரமாக உயர்ந்துள்ளது. குறிப்பிட்ட ஒரு மாதத்தில், மிக அதிகளவில், வாடிக்கையாளர்களை இந்நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு, 23.59 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது.ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஓர் அங்கமான, ஐடியா செல்லுலார், சென்ற பிப்ரவரி மாதத்தில், கூடுதலாக 25 லட்சத்து 10 ஆயிரம் வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை,8 கோடியே 68 லட்சமாக உயர்ந்துள்ளது.ஏர்செல் நிறுவனம், இம்மாதத்தில், கூடுதலாக 16 லட்சத்து 60 ஆயிரம் வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டது. இதன், ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 5 கோடியே 35 லட்சமாக அதிகரித்துள்ளது.பொதுத் துறையைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., ஆகிய இரண்டு நிறுவனங்களுமாக, சென்ற பிப்ரவரி மாதத்தில், முறையே 15 லட்சம் மற்றும் 25 ஆயிரத்து 786 புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளன. இவ்விரு நிறுவனங்களின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை முறையே, 8 கோடியே 51 லட்சம் மற்றும் 51 லட்சத்து 70 ஆயிரமாக அதிகரித்துள்ளது.நடப்பு 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில், ரிலையன்ஸ் டெலி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 2 கோடியே 39 லட்சமாக இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)