பதிவு செய்த நாள்
19 மார்2011
09:09
பீஜிங்: உப்பை அதிகளவு பயன்படுத்தினால் கதிர்வீச்சு அபாயத்தில் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள லாம் என செய்தி பரவியதால் சீனாவில் உப்பு விற்பனை அமோகமாக நடைபெற்றது. இதுபற்றிய விபரம் வருமாறு: ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியை அடுத்து அங்கிருந்த அணு உலைகள் வெடித்துச்சிதறும் அபாயத்தில் இருந்து வருகின்றன. இந்நிலையில் கதிர்வீச்சு அபாயத்தில் இருந்து தங்களை காத்துக்கொள்ள அண்டை நாட்டு மக்கள் பல்வேறு உத்திகளை பின்பற்றி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக உப்பில் கலக்கப்படும் அயோடின் கதிர்வீச்சை குறைக்கும் தன்மை உண்டு என்று சீன மக்கள் நம்பினர். இதனையடுத்து சீன பகுதி முழுவதும் உள்ள மக்கள் உப்புக்களை வாங்கி சேகரிக்கத்துவங்கினர். இது வெறும் புரளி என்று சீன அரசு தொலைக்காட்சி மூலம் தெளிவுப்படுதினாலும் மக்கள் நம்பத்ததயாராக இல்லை. இதனைதொடர்ந்து அனைத்து டிபார்ட்மென்ட் ஸ்டோர்களிலும் இருந்த உப்பு பாக்கெட்டுகள் உடனுக்குடன் தீர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|