பதிவு செய்த நாள்
21 மார்2011
04:06
மும்பை:அனில் திருபாய்அம்பானி குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், öŒன்ற பிப்ரவரியில் 33 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளது என, நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிறுவனம் உள்நாட்டில், ஜி.எஸ்.எம்., மற்றும் சி.டி.எம்.ஏ., என, இரண்டு தொழில்நுட்பத்தில், ஒயர் இணைப்பு இல்லாத தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகிறது. இவ்விரு தொழில்நுட்பத்திலும், சென்ற பிப்ரவரி மாதத்தில் மட்டும் 33 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளது.நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 13 கோடியே 22 லட்சமாக அதிகரித்துள்ளது. சென்ற ஜனவரியில், 3 லட்சத்து 22 ஆயிரம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பாண்டு ஜனவரி மாதத்தில், புதிதாக 1 கோடியே 90 லட்சம்பேர் மொபைல்போன் பயன்பாட்டில் இணைந்துள்ளனர். இதையடுத்து, நாட்டின் மொபைல் போன் சேவையை பயன்படுத்துவோரின் மொத்த எண்ணிக்கை, 77 கோடி@ய 12 லட்சமாக உயர்ந்துள்ளது.நாட்டில், சராசரியாக 10பேருக்கு 8பேர் மொபைல்போன் சேவையைபெற்றுள்ளனர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|