பதிவு செய்த நாள்
21 மார்2011
04:05
புதுடில்லி:இந்தியாவில், பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில், டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், வரும் ஏப்ரல் மாதம் முதல் கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.மூலப்பொருள்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கார்கள் விலை உயர்த்தப்படுவதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.நிறுவனத்தின், இண்டிகா வகை கார் 7,000 முதல் 9,000 ரூபாய் வரையிலும், விஸ்டா மற்றும் இண்டிகோ சி.எஸ். கார் முறையே, 8,000 முதல் 11 ஆயிரம் ரூபாய் வரையிலும், மான்சா கார் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரையிலும் விலை உயர்த்தப்படுகிறது.இருப்பினும், உலகின் குறைந்த விலை, நானோ காரின் விலை உயத்தப்படவில்லை.மேலும், டாட்டா சுமோ காரின் விலை, 13 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரையிலும், கிராண்ட் வகை காரின் விலை, 16 ஆயிரம் முதல் 19 ஆயிரம் ரூபாய் வரையிலும், சபாரி வகை காரின் விலை, 18 ஆயிரம் முதல் 29 ஆயிரம் ரூபாய் வரையிலும், ஏர்யா காரின் விலை 30 ஆயிரம் முதல் 36 ஆயிரம் ரூபாய் வரையிலும் உயர்த்தப்படுகிறது.டாட்டா வென்சர் காரின் விலை 9,000 முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்படுகிறது.இவ்வாறு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|