பதிவு செய்த நாள்
24 மார்2011
16:42
ஹெல்சிங்கி : ஏப்ரல் மாதம் முதல் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட இருப்பதாக நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. மொபைல்போன்கள் தயாரிப்பு மற்றும் வர்த்தகத்தில் சர்வதேச அளவில் முடிசூடா மன்னனாக விளங்கும் நோக்கியா நிறுவனம், நோக்கியா, மென்பொருள் உலகின் முடிசூடா மன்னனான மைக்ரோசாப்டுடன் இணைந்து ஸ்மார்ட்போன் தயாரி்ப்பில் ஈடுபட உள்ளது. இந்த கைகோர்ப்பின் காரணமாக, நோக்கியா நிறுவனத்தில் ஆட்குறைப்பு இருக்கலாம் என்று சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில், நோக்கியா நிறுவன உயர் அதிகாரி டோமி கூப்பிலோமேய்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த ஆட்குறைப்பிற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை, ஏப்ரல் மாத இறுதியில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், எத்தனை பேர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தற்போதைக்கு கூற இயலாது என்றும், கடந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில், தங்கள் நிறுவனம் 1,800 பேரை பணிநீக்கம் செய்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோக்கியா - மைக்ரோசாப்ட் கூட்டு (மறு வடிவமைப்பு) பலருக்கும் பணி இழப்பு பற்றிய பயத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்லாந்து அரசாங்கத்துடன் இணைந்து முடிந்தளவு பணி இழப்பைக் குறைக்க முயல்வதாய் கூறியுள்ளது. மைக்ரோசாப்ட்டின் மொபைல் போன் தொழில்நுட்பத்தை தனது முதன்மையான ஆப்ரேடிங் சிஸ்டமாக கொள்ளப் போவதாய் நோக்கியா அறிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|