ஏற்றத்துடனேயே முடிவடைந்தது பங்குவர்த்தகம்ஏற்றத்துடனேயே முடிவடைந்தது பங்குவர்த்தகம் ... பங்குச் சந்தை பட்டியலில் லவ்வபிள் லிங்கரி நிறுவனம் பங்குச் சந்தை பட்டியலில் லவ்வபிள் லிங்கரி நிறுவனம் ...
ஏப்ரலில் அறு‌வடை : நோக்கியா அதிரடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மார்
2011
16:42

ஹெல்சிங்கி : ஏப்ரல் மாதம் முதல் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட இருப்பதாக நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. மொபைல்போன்கள் தயாரிப்பு மற்றும் வர்த்தகத்தில் சர்வ‌தேச அளவில் முடிசூடா மன்னனாக விளங்கும் நோக்கியா நிறுவனம், நோக்கியா, மென்பொருள் உலகின் முடிசூடா மன்னனான மைக்ரோசாப்டுடன் இணைந்து ஸ்மார்ட்போன் தயாரி்ப்பில் ஈடுபட உள்ளது. இந்த கைகோர்ப்பின் காரணமாக, நோக்கியா நிறுவனத்தில் ஆட்குறைப்பு இருக்கலாம் என்று சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில், ‌நோக்கியா நிறுவன உயர் அதிகாரி டோமி கூப்பிலோமேய்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த ஆட்குறைப்பிற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை, ஏப்ரல் மாத இறுதியில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், எத்தனை பேர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தற்போதைக்கு கூற இயலாது என்றும், கடந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில், தங்கள் நிறுவனம் 1,800 பேரை பணிநீக்கம் செய்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோக்கியா - மைக்ரோசாப்ட் கூட்டு (மறு வடிவமைப்பு) பலருக்கும் பணி இழப்பு பற்றிய பயத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்லாந்து அரசாங்கத்துடன் இணைந்து முடிந்தளவு பணி இழப்பைக் குறைக்க முயல்வதாய் கூறியுள்ளது. மைக்ரோசாப்ட்டின் மொபைல் போன் தொழில்நுட்பத்தை தனது முதன்மையான ஆப்ரேடிங் சிஸ்டமாக கொள்ளப் போவதாய் நோக்கியா அறிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)