பதிவு செய்த நாள்
25 மார்2011
00:18
மும்பை: பெண்களுக்கான உள்ளாடைகள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும், லவ்வபிள் லிங்கரி நிறுவனம், அண்மையில், பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு, மூலதன சந்தையில் களமிறங்கியது. இந்நிறுவனத்தின் பங்குகள், வியாழக்கிழமையன்று, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டன.லவ்வபிள் லிங்கரி நிறுவனம், 'புக் பில்டிங்' எனப்படும் ஏல அடிப்படையில், பங்கு ஒன்றை, 195 - 205 ரூபாய் என்றளவில் வெளியிட்டது. இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டிற்கு அதிகளவில் விண்ணப்பங்கள் வந்ததை அடுத்து, பங்கின் வெளியீட்டு விலையை 205 ரூபாயாக நிர்ணயித்தது. இப்பங்கு வெளியீட்டின் மூலம், இந்நிறுவனம், 93.27 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டது.பெங்களூரில் உள்ள இதன் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்து கொள்ளவும், அதன் பிராண்டை பிரபலப்படுத்திக் கொள்வதற்காகவும், இத்தொகையை பயன்படுத்திக் கொள்ளவுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இதன் பங்குகள் பட்டியலிடப்பட்ட போது, தொடக்கத்தில் வெளியீட்டு விலையை விட, அதிகமாக 261.50 ரூபாய்க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 278.95 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 241.40 ரூபாய்க்கும் விலை போனது. வர்த்தகம் முடியும் போது, 249.20 ரூபாயில் நிலைபெற்றது.தேசிய பங்குச் சந்தையில் தொடக்கத்தில் இதன் பங்கின் விலை, 240 ரூபாய்க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 278.90 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 240 ரூபாய்க்கும் விலை போனது. வர்த்தகம் முடியும் போது 252.35 ரூபாயில் நிலைகொண்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|