பதிவு செய்த நாள்
25 மார்2011
12:24
புதுடில்லி: 'மத்திய கிழக்கு மற்றும் வட கொரியாவில் நடந்துவரும் அரசியல் கிளர்ச்சிகளால், நமது எண்ணெய் இறக்குமதி பாதிக்குமோ என, அரசு கவலை கொள்கிறது' என, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார். ராஜ்யசபாவில் நேற்று நிதி மசோதா குறித்த விவாதத்திற்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, மத்திய கிழக்கு நாடுகளில் நிகழ்ந்துவரும் அரசியல் கிளர்ச்சிகள் குறித்து கவலை தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது: கடந்தாண்டு, நாம் இறக்குமதி செய்த, 10 கோடி டன் கச்சா எண்ணெயில், மூன்றில் இரண்டு பகுதி (6.7 கோடி டன்) மத்திய கிழக்கில் இருந்து மட்டுமே வந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் இப்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்ந்து ஸ்திரமற்ற சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. அங்கு அமைதியான சூழ்நிலை திரும்பவேண்டும் என்பதில், நாம் மிகுந்த அக்கறை கொள்கிறோம். அது மட்டுமல்ல, மத்திய கிழக்கு நாடுகளில், 60 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஜப்பானை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், உலகளவில் பொருட்களின் விலை ஏறும் போது, அதை நம்மையும் பாதிக்கிறது. அதனால் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிறது. இவ்வாறு பிரணாப் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|