பதிவு செய்த நாள்
25 மார்2011
13:01
ஐதராபாத் : ரெயின் காமாடிட்டீஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒருஅங்கமான ரெயின் சிமெண்ட்ஸ் லிமிடெட் (ஆர்சிஎல்), கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள யூனிட்டில் செயல்பாட்டை துவக்கியுள்ளது. இதுதொடர்பாக, ரெயின் சிமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போதைய அளவில், தங்கள் நிறுவன உற்பத்தி 3.1 மில்லியன் டன்னாக இருப்பதாகவும், விரைவில் 3.50 மில்லியன் டன்னாக உற்பத்தி அதிகரிக்கப்பட உள்ளது. இதற்காக, சிமெண்ட் தயாரிப்பு பொருளான சாம்பலை, கர்நாடகா பவர் கார்ப்பரேசனிடமிருந்து பெறுவதற்கான 10 ஆண்டுகால ஒப்பந்தத்தில் தங்கள் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது. இந்த பெல்லாரி யூனிட்டில், சாம்பல் ஹேண்டிலிங் மற்றும் சிமெண்ட் பேக்கேஜிங் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|