பதிவு செய்த நாள்
27 மார்2011
04:04
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, மார்ச் 18ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 166 கோடி டாலர் (7,636 கோடி ரூபாய்) உயர்ந்து, 30 ஆயிரத்து 350 கோடி டாலராக (13 லட்சத்து 96 ஆயிரத்து 100 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது, öŒன்ற வாரத்தில், 75.50 கோடி டாலர் (3,473 கோடி ரூபாய்) சரிவடைந்து, 30 ஆயிரத்து 183 கோடி டாலராக (13 லட்சத்து 88 ஆயிரத்து 418 கோடி ரூபாய்) குறைந்திருந்தது.இதே வாரத்தில், அன்னியச் செலாவணிகளின் சொத்து 146.80 கோடி டாலர் (6,753 கோடி ரூபாய்) அதிகரித்து, 27 ஆயிரத்து 373 கோடி டாலராக (12 லட்சத்து 59 ஆயிரத்து 144 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.சர்வதேச நிதியத்தில், நம் நாடு வைத்துள்ள செலாவணி மதிப்பு 14 கோடி டாலர் (644 கோடி ரூபாய்) உயர்ந்து, 241 கோடி டாலராக (11 ஆயிரத்து 72 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.அதேசமயம், ரிசர்வ் வங்கி வைத்துள்ள எஸ்.டீ.ஆர். மதிப்பு 6 கோடி டாலர் (276 கோடி ரூபாய்) அதிகரித்து, 523 கோடி டாலராக (24 ஆயிரத்து 53 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.சென்ற வாரத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான யூரோ, யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகளின் வெளி மதிப்பு மாறுபட்டதை தொடர்ந்து, கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணிகளின் மதிப்பு உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|