பதிவு செய்த நாள்
29 மார்2011
00:10
மும்பை: நடப்பாண்டில், மாம்பழம் உற்பத்தி நன்கு இருக்கும் என, தேசிய தோட்டக்கலை வாரியத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.நாட்டில், பிப்ரவரி மாதம் முதல், ஜூன் மாதம் வரையில், மாம்பழம் அறுவடை செய்யப்படுகிறது. நடப்பாண்டில், மாம்பழம் உற்பத்தி 7 சதவீதம் வளர்ச்சி கண்டு, 16 ஆயிரத்து 123 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என, மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது, சென்ற 2010ம் ஆண்டில், 15 ஆயிரத்து 27 லட்சம் டன்னாக இருந்தது.இந்திய மாம்பழ வகைகளில், அல்போன்சா வகை மாம்பழம் அதிக சுவையுடையது. அல்போன்சா வகை மாம்பழங்களின் மொத்த உற்பத்தியில், 40 சதவீத அளவிற்கு, மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.சென்ற 2010ம் ஆண்டில், அல்போன்சா மாம்பழங்கள் 3.40 லட்சம் எக்டேரில், 17.70 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டது. நடப்பாண்டில், இதன் உற்பத்தி 25 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|