பதிவு செய்த நாள்
30 மார்2011
09:30
புதுடில்லி : இந்தியாவின் பொதுத்துறையை சேர்ந்த முன்னணி நீர்மின் உற்பத்தி நிறுவனமான எஸ்ஜேவிஎன்எல் நிறுவனம், காற்றாலை மின் உற்பத்தியில் களமிறங்க உள்ளதாகவும், இதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக ரூ.300 கோடி முதலீட்டில் 50 மெகா வாட் திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையம் ஒன்றை அடுத்த ஆண்டில் அமைக்க முடிவு செய்துள்ளது. மரபுசாரா எரிசக்தி துறையில் இதர வழிமுறைகளிலும் மின் உற்பத்தியை மேற்கொள்ள விரும்புவதாகவும், காற்றாலை மின் திட்டங்களுக்கு சாதகமான சூழ்நிலை உள்ள ஐந்து மாநிலங்களில் தலா 50 மெகா வாட் திறனில் காற்றாலைகளை அமைக்க உள்ளதாகவும் இந்நிறுவனத்தின் தலைவர்மற்றும் நிர்வாக இயக்குனர் ஆர்.பி. சிங் தெரிவித்தார். இதற்காக தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரளா, ராஜஸ்தான் மற்றும் மத்தியபிர தேசத்தின் சில பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்காக டெண்டர் விடுவதற்கான ஆயத்தப் பணிகளும் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. காற்றாலைகள் அமைக்கும் பணி அடுத்த ஆண்டில் தொடங்கும். திட்டமிட்டபடி எல்லாம் நடந்தால் நிறுவனத்தின் மின் உற்பத்தித் திறன் அடுத்த ஆண்டிலேயே மேலும் 50 மெகா வாட் அதிகரிக்கும் என அவர் மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|