பதிவு செய்த நாள்
01 ஏப்2011
11:58
பாரீஸ்:ஜப்பானில் கடந்த 11-ம் தேதி ஏற்பட்ட சுனாமி காரணமாக எலக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உலகம் முழுவதும் ஸ்மார்ட் போன்கள், வீடியோ கேமராக்கள் போன்றவற்றின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகர விற்பனையாளர் பிலிப்பி டாவின் தெரிவித்துள்ளார். வீடியே கேம்ஸ் சாதனங்கள் ,வீடியோ கேமராக்கள் மற்றும் ஸ்டில்கேமராக்கள் டிவி தயாரிப்பு என ஜப்பான் நிறுவனங்கள் தயாரித்து உலகம் முழுவதும்விற்பனை செய்து வருகின்றன. மேலும்மேற்கண்டவைகளுக்கு தேவையான செமிகண்டக்டர் பாகங்கள் உற்பத்திசெய்யும் பெரும்பாலான நிறுவனங்கள் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ளது.மேற்கண்ட நிறுவனங்கள் வரும் மே மாதத்தில் மீண்டும் செயல்பட துவங்கும். முழு உற்பத்தியை அடைய ஆண்டு இறுதியாகி விடும் என்பதால் பொருட்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்து அதன் விலை உயரும் நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|