பதிவு செய்த நாள்
02 ஏப்2011
05:08
புதுடில்லி:சென்ற பிப்ரவரி மாதத்தில், நாட்டின் ஆடைகள் ஏற்றுமதி 110 கோடி டாலராக (5,060 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே மாதத்தை விட, 24 சதவீதம் அதிகம்.நம் நாட்டிலிருந்து ஆடைகளை இறக்குமதி செய்து கொள்வதில், ஏற்றுமதியில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு 65 சதவீதமாக உள்ளது.மேலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் இந்திய ஆடைகளுக்கு தேவைப்பாடு அதிகரித்து வருகிறது. கடந்த 2009-10ம் நிதியாண்டில், நம்நாட்டின் ஆடைகள் ஏற்றுமதி 93.80 கோடி டாலராக (4,315 கோடி ரூபாய்) இருந்தது.சென்ற நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாதங்களில், நாட்டின் ஆடைகள் ஏற்றுமதி, முந்தைய ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில், 2.04 சதவீதம் அதிகரித்து 980 கோடி டாலராக (45 ஆயிரத்து 80 கோடி ரூபாய்)உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|