பதிவு செய்த நாள்
04 ஏப்2011
00:32
புதுடில்லி: நாட்டின், கோதுமை கொள்முதல் 30 சதவீதம் குறைந்துள்ளது என, இந்திய உணவுக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.சென்ற 2010-11ம் நிதியாண்டில், 3.67 லட்சம் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கொள்முதலை விட, 30 சதவீதம் குறைவு. மத்திய பிரதேசத்திலிருந்து கோதுமை வரத்து குறைந்துள்ளதே, இதற்கு காரணம்.கடந்த நிதியாண்டில், உணவு தானியங்கள் கொள்முதல் மற்றும் வினியோகம், 5.28 லட்சம் டன்னாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.கோதுமை கொள்முதல் மார்ச் மாதம் மத்தியில் துவங்கி, ஜூன் மாத இறுதியில் நிறைவடையும். நடப்பாண்டில், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே கோதுமை கொள்முதல் துவங்கி விட்டது. தற்போது, பஞ்சாப், அரியானா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொள்முதல் துவங்கியுள்ளது.சென்ற 2010-11ம் ஆண்டில், 2.20 கோடி டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது நடப்பு 2011-12ம் ஆண்டில், 2.60 கோடி டன்னாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 2010-11ம் ஆண்டு, ஜூலை முதல் ஜூன் வரையிலான பயிர் பருவத்தில் கோதுமை உற்பத்தி, 8.10 கோடி டன்னாக இருக்கும் என, இந்திய உணவுக் கழகம் மதிப்பிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|