பதிவு செய்த நாள்
11 ஏப்2011
14:26
கோல்கட்டா : பணவீக்கம் மற்றும் உணவுப்பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். கோல்கட்டாவில், பத்திரிகயாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் கூறியதாவது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் விளைவாக, உணவுப்பணவீக்கம் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. மார்ச் மாதத்தி்ல் 8.9 சதவீதமாக பதிவாகி உள்ள உணவுப்பணவீக்கம், 2010ம் ஆண்டு பிப்ரவரிவாக்கில் 20 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, மத்திய அரசு எடுத்த அதிரடி நடடிக்கையினால் உணவுப்பணவீக்கம் கட்டுக்குள் வந்துள்ளது. அதேபோல், பணவீக்கத்தையும் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|