பதிவு செய்த நாள்
19 ஏப்2011
10:53
மும்பை : இந்தியாவில், ஸ்மார்ட்போன் வர்த்தகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக எல்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் (மொபைல் கம்யூனிகேசன் பிரிவு) உயர் அதிகாரி விஷால் சோப்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தியாவில் ஸ்மார்ட்போன் வர்த்தகத்தை விரிவுபடுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதற்காக, புனேயில் இயங்கிவரும் உற்பத்தி யூனிட்டில் ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்ய உத்தேசித்துள்ளோம். இந்த யூனிட்டில் அடிப்படை வசதியிலான போன்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆண்டிற்கு 8 மில்லியன் போன்களை உற்பத்தி செய்து வருகிறோம். இந்தாண்டின் இறுதிக்குள் 10 மில்லியன் போன்கள் உற்பத்தி என்ற அளவில் உற்பத்தியை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். அதேபோல், தற்போது 10 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளோம், இந்த ஆண்டின் இறுதி்க்குள், 4.5 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். அதன்மூலம் ரூ. 3 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட முடிவு செய்திருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|