பதிவு செய்த நாள்
20 ஏப்2011
01:36
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், செவ்வாய் கிழமையன்று, அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. காலையில், பங்கு வர்த்தகம் தொடங்கிய போது, குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகளுக்கு தேவைப்பாடு காணப்பட்டது. இருப்பினும், ஜப்பான், ஹாங்காங், சீனா ஆகிய நாடுகளில் பங்கு வர்த்தகம் சுணக்கமாக இருந்தது.இந்நிலையில், எச்.டீ.எப்.சி. பேங்க், இண்டஸ்இந்த் பேங்க் மற்றும் ஐ.டி.பீ.ஐ. பேங்க் ஆகியவற்றின் நிதிநிலை செயல்பாடு நல்ல அளவில் இருந்ததால், கடைசி ஒரு மணி நேர வர்த்தகத்தில், வங்கி, நுகர்வோர் சாதனங்கள், தகவல் தொழில்நுட்பம், எண்ணெய் எரிவாயு போன்ற சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. அதேசமயம் மோட்டார் வாகனம், மின்சாரம், நுகர்பொருள்கள் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் வர்த்தகம் முடியும் போது, 30.66 புள்ளிகள் அதிகரித்து, 19,121.83 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 19,201.92 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 18,976.19 புள்ளிகள் வரையிலும் சென்றது.'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 18 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தும், 12 நிறுவன பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 11.65 புள்ளிகள் உயர்ந்து 5,740.75 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,762.95 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,693.25 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|