பதிவு செய்த நாள்
21 ஏப்2011
01:49
மும்பை:ஐ.டி.பி.ஐ. பேங்க், சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டில், 1,650 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, இதற்கும் முந்தைய நிதியாண்டை விட 60 சதவீதம் (1,031 கோடி ரூபாய்) அதிகம்.இதே ஆண்டுகளில், இவ்வங்கியின் செயல்பாட்டு லாபம் 52.50 சதவீதம் வளர்ச்சியடைந்து, 2,726 கோடி ரூபாயிலிருந்து 4,158 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.சென்ற நிதியாண்டில் வங்கியின் மொத்த வணிகம் 3 லட்சத்து 5,869 கோடி ரூபாயிலிருந்து, 3 லட்சத்து 37 ஆயிரத்து 584 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில், திரட்டப்பட்ட டிபாசிட் 1 லட்சத்து 67 ஆயிரத்து 677 கோடி ரூபாயிலிருந்து, 1 லட்சத்து 80 ஆயிரத்து 486 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வழங்கப்பட்ட கடன்கள் 1 லட்சத்து 38 ஆயிரத்து 202 கோடி ரூபாயிலிருந்து, 1 லட்சத்து 57 ஆயிரத்து 98 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இவ்வங்கி, சென்ற நிதியாண்டிற்கு 35 சதவீத டிவிடெண்டை வழங்க முடிவு செய்துள்ளது. முந்தைய நிதியாண்டிற்கு, வங்கி 30 சதவீத டிவிடெண்டை வழங்கியிருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|