இந்தியாவில் வெளிநாட்டு அரசுகள் 20சதவீத பங்கு முதலீட்டுக்கு அனுமதிஇந்தியாவில் வெளிநாட்டு அரசுகள் 20சதவீத பங்கு முதலீட்டுக்கு அனுமதி ... இன்று ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம் இன்று ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம் ...
சென்ற 2010 - 11ம் நிதியாண்டில் நாட்டின் ஏற்றுமதி 37.5 சதவீதம் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2011
01:54

புதுடில்லி:சென்ற 2010 - 11ம் நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி 37.5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 24 ஆயிரத்து 590 கோடி டாலராக (11 லட்சத்து 31 ஆயிரத்து 140 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. இந்திய பொருள்களுக்கு, மேற்கத்திய நாடுகளில் மட்டுமின்றி, லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட இதர நாடுகளிலும் அதிக வரவேற்பு காணப்படுகிறது. இதனால், நம் நாட்டின் ஏற்றுமதி பன்மடங்கு அதிரித்துள்ளது என, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.கடந்த மார்ச் மாதத்தில் மட்டும், நாட்டின் ஏற்றுமதி 2,910 கோடி டாலர் என்றசாதனை அளவை எட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே மாதத்தில்மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 43.9 சதவீதம் அதிகமாகும். இதுவரை இல்லாத அளவிற்கு, சென்ற மார்ச் மாதம் ஏற்றுமதிமேற்கொள்ளப்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளபோதிலும், நாட்டின் ஏற்றுமதியில்சாதனை நிகழ்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.சென்ற 2010 - 11ம் நிதியாண்டில், கச்சா எண்ணெய் விலை அதிகரித்தபோதிலும், இறக்குமதி 21.5 சதவீதம் உயர்ந்து, 35 ஆயிரத்து 30 கோடி டாலர் (16 லட்சத்து 11 ஆயிரத்து 380 கோடி ரூபாய்) என்ற அளவில் இருந்தது. நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 10 ஆயிரத்து 440 கோடி டாலராக (4 லட்சத்து 80 ஆயிரத்து 240 கோடி ரூபாய்) உள்ளது. சென்ற மார்ச் மாதத்தில், 3,470 கோடி டாலர் (1 லட்சத்து 59 ஆயிரத்து 620 கோடி ரூபாய்) மதிப்பிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில்மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியை விட 17.3 சதவீதம் அதிகமாகும்.நடப்பு நிதியாண்டிற்கான, நாட்டின் ஏற்றுமதி இலக்கு இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. எனினும், ஏற்றுமதியை அதிகரிக்க கடும் முயற்சி மேற்கொள்ளப்படும். அதே சமயம், வரும் 2013 - 14ம் நிதியாண்டில், 45 ஆயிரம் கோடி டாலர் (20 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய்) அளவிற்கு பொருள்கள் ஏற்று மதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என, ஆனந்த் சர்மா மேலும் கூறினார்.நாட்டின் ஏற்றுமதியில், பொறியியல் பொருள்களின் பங்களிப்பு 84.70 சதவீதம் வளர்ச்சி கண்டு, 6,000 கோடி டாலராக (2 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய்) உள்ளது. இதையடுத்து, பெட்ரோலியப் பொருள்கள் ஏற்றுமதி 50.5 சதவீதம் அதி கரித்து 4,250 கோடி டாலராக (1 லட்சத்து 95 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 15.4 சதவீதம் வளர்ச்சி கண்டு 3,350 கோடி டாலராக (1 லட்சத்து 54 ஆயிரத்து 100 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. மருந்துகள் மற்றும் மருந்து துறை சார்ந்த பொருள்களின் ஏற்றுமதி 15 சதவீதம் உயர்ந்து 1,030 கோடி டாலராக (47 ஆயிரத்து 380 கோடி ரூபாய்) வளர்ச்சி கண்டுள்ளது.ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி 4.23சதவீதம் வளர்ச்சி கண்டு 1,110கோடி டாலராக (51 ஆயிரத்து 60 கோடி ரூபாய்) உயர் ந்துள்ளது.மேலும், அதிக அளவில் தொழிலாளர்களின் பங்களிப்பை கொண்ட பிரிவுகளான, தரை விரிப்பு கள்,சணல் மற்றும்தோல் பொருள்கள் ஆகியவையும் ஏற்றுமதி வளர்ச்சிக்கு பெருமளவு துணை புரிந்துள் ளன.வேளாண் பொருள்கள் ஏற்றுமதி மற்றும்தேயிலை, காபி, நறுமணப்பொருள்கள், முந்திரி, புண்ணாக்கு, பழங்கள், காய்கறிகள் மற்றும் கடல் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி 1,292கோடி டாலராக (59 ஆயிரத்து 432 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. ஆனால், இரும்புத் தாது ஏற்றுமதி 25சதவீதம்சரிவடைந்து 450 கோடி டாலராக (20 ஆயிரத்து 700 கோடி ரூபாய்) குறைந்துள்ளது.சென்ற நிதியாண்டில், ஏற்றுமதி அதிகரித்துள்ளது திருப்தி அளிக்கிறது. இதே நிலை நீடித்தால், வரும் 2013 - 14ம் நிதியாண்டில் அரசு நிர்ண யித்துள்ள 45 ஆயிரம்கோடி டாலர் என்ற இலக்கை நாம் எட்ட முடியும். இவ்வாறு ஆனந்த்சர்மா கூறினார். நவரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 42 சதவீதம் உயர்வு:இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங் களுக்கு, உலகின் பல நாடுகளில், அதிக தேவை இருந்து வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் இந்திய நகைகளுக்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது. இதனால் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது.சென்ற நிதியாண்டில், இவை 1 லட்சத்து 96 ஆயிரத்து 470 கோடி ரூபாய் மதிப்பிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது, கடந்த 2009-10ம் நிதியாண்டில் மேற்கொள்ளப் பட்ட ஏற்றுமதியை விட 42 சதவீதம் (1 லட்சத்து 38 ஆயிரத்து 752 கோடி ரூபாய்) அதிகமாகும். நாட்டின் மொத்த ஏற்றுமதியில், இத்துறையின் பங்களிப்பு 17 சதவீதமாகும்.சென்ற நிதியாண்டில் இத்துறையின் ஏற்றுமதியில் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன. இவற்றின் ஏற்றுமதி வளர்ச்சி 55சதவீதம் அதிகரித்து 1லட்சத்து 28ஆயிரத்து 671கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.நடப்பு 2011-12ம் நிதியாண்டில் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 15-20சதவீதம் வளர்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)