ஏர்போர்ட் ஹாஸ்பிடல் சேவையை துவக்குகிறது அப்பல்லோஏர்போர்ட் ஹாஸ்பிடல் சேவையை துவக்குகிறது அப்பல்லோ ... நெஸ்லே இந்தியாநிகர லாபம் 27 சதவீதம் உயர்வு நெஸ்லே இந்தியாநிகர லாபம் 27 சதவீதம் உயர்வு ...
ஏர்இந்தியா: வல்லுனர்களுக்கு பற்றாக்குறை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2011
00:08

மும்பை,: கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஏர்இந்தியா, இன்னும் மூன்று ஆண்டுகளில் அனுபவம் வாய்ந்த 4,000 உயரதிகாரிகளின் பற்றாக்குறையையும் சந்திக்க போகிறது. ஏர்இந்தியாவில் தற்போது 30 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு ஏர்இந்தியா, ஆண்டுக்கு 3,000 கோடி ரூபாய் ஊதியம் வழங்குகிறது. இந்த ஊதியத்தையும் குறிப்பிட்ட காலத்தில் வழங்க முடியாமல் ஏர்-இந்தியா திணறி வருகிறது. கடந்த 2007ல், ஏர்இந்தியாவுடன், இந்தியன் ஏர் லைன்ஸ் நிறுவனம் இணைக்கப்பட்டது. அது முதல் ஏர்இந்தியா, இதுவரை 13 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்து வருகிறது. இந்நிலையில், ஏர்இந்தியாவில் பணியாற்றும் 4,000 பேர் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ளனர். இவர்களில் 30 பேர் பல்வேறு பிரிவுகளில் இயக்குனர்களாக உள்ளனர். அவர்களில் 13 பேர் அடுத்தாண்டு ஓய்வு பெற உள்ளனர். 50 பொது மேலாளர்களில், 30 பேர் வரும் 2013ல் பதவியில் இருந்து ஓய்வு பெறுகின்றனர்.ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கிதிணறி வரும் ஏர்இந்தியா, இனி அனுபவம் வாய்ந்த மூத்த அதிகாரிகளின் ஆலோசனைகள் மற்றும் பங்களிப்பையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக, ஏர்இந்தியாவில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், தொடர்ந்து பணியாற்றுவோருக்கு, குழு வருங்கால வைப்பு நிதி, விடுப்பு ஈட்டுத் தொகை, பணிக் கொடை, ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் வழங்கப்படுகின்றன.ஆனால், செலவினத்தை குறைக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, ஏர்இந்தியா, இனி ஓய்வு பெறுபவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நிறுவனத்தில் இருந்து அடுத்த மூன்றாண்டுகளில் ஓய்வு பெற உள்ள 4,000 பேரின் இடத்திற்கு புதியவர்கள் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஏர்இந்தியாவின் இழப்பிற்கு அளவிற்கு அதிகமான ஊழியர்களும், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியமும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. அதனால், பணியிடங்களை குறைக்கவும் ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.இதன் மூலம், 60 கோடி ரூபாயை திரட்டிக் கொள்ள நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இப்பங்கு வெளியீடு, வரும் 27 தொடங்கி 29ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. திரட்டிக் கொள்ளப்படும் நிதி, தமிழகத்தில் புதிய காகித ஆலைகளைத் தொடங்கவும், விரிவாக்க திட்டங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)