பதிவு செய்த நாள்
28 ஏப்2011
01:39
மும்பை:ஆக்சிஸ் பேங்க் சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில்1,020 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட 33 சதவீதம் (765 கோடி ரூபாய்) உயர்வாகும்.ஆக்சிஸ் வங்கி சென்ற முழு நிதியாண்டில் 3,388 கோடி ரூபாயை நிகர லாபமாக பெற்றுள்ளது. இதுகடந்த நிதியாண்டை விட 35 சதவீதம் (2,515 கோடி ரூபாய்) அதிகமாகும். வங்கி திரட்டிய டிபாசிட் 34 சதவீதம் வளர்ச்சி கண்டு 1 லட்சத்து 41 ஆயிரத்து 300 கோடி ரூபாயிலிருந்து 1 லட்சத்து 89 ஆயிரத்து 238 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வங்கி வழங்கிய கடன்கள் 36 சதவீதம் வளர்ச்சியடைந்து 1 லட்சத்து 4 ஆயிரத்து 341 கோடி ரூபாயிலிருந்து 1 லட்சத்து 42 ஆயிரத்து 407 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆக்சிஸ் வங்கி சென்ற நிதியாண்டிற்கு அதன் பங்குதாரர்களுக்கு140 சதவீத டிவிடெண்டு வழங்க உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|