பதிவு செய்த நாள்
28 ஏப்2011
01:42
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் நேற்றும் சுணக்கமாக இருந்தது. அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில்பங்கு வர்த்தகம் நன்கு இருந்த நிலையில்ஹாங்காங்சு சீனா உள்ளிட்டஇதர ஆசிய பங்குச் சந்தைகளில் பங்கு வியாபாரம் மந்தமாக இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில் ரியல் எஸ்டேட்சு பொறியியல் உலோகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்தது. அதேசமயம் நுகர்பொருள்கள்மருந்து போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள்சு அதிக விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் வர்த்தகம் முடியும் போது 96.66 புள்ளிகள் சரிவடைந்து 19சு448.69 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாகசு 19,633.63 புள்ளிகள் வரையிலும் குறைந்தபட்சமாகசு 19சு412.79 புள்ளிகள் வரையிலும் சென்றது.'சென்செக்ஸ்' கணக்கிட உதவும்சு 30 நிறுவனங்களுள்23 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் ஏழு நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 34.50 புள்ளிகள் குறைந்துசு 5,833.90 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாகசு 5சு892.35 புள்ளிகள் வரையிலும்சு குறைந்தபட்சமாகசு 5,819.95 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|