பதிவு செய்த நாள்
03 மே2011
00:12
புதுடில்லி: அட்சய திருதியை முன்னிட்டு, தங்க ஆபரணங்கள் விற்பனை, 40 சதவீதம் உயரக் கூடும் என, இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் வர்த்தக கூட்டமைப்பு மதிப்பிட்டுள்ளது. அட்சய திருதியை, வரும் 6ம் தேதி வருகிறது. அன்று, தங்கம் வாங்கினால், தொடர்ந்து தங்கம் வாங்க கூடும் என்ற நம்பிக்கை மக்களிடத்தில், சில ஆண்டுகளாக அதிகரித்து காணப்படுகிறது. இதனால், வரும் அட்சய திருதியையன்று, அதிகளவில் தங்கம் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 கிராம் தங்கத்தின் விலை, 23 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ள போதிலும், மக்கள் தொடர்ந்து தங்க ஆபரணங்களை வாங்கி வருகின்றனர்.இதனால், கடந்த ஆண்டை விட, வரும் அட்சய திருதியை தினத்தன்று, தங்க விற்பனை, 40 சதவீதம் வரை அதிகரிக்கும் என, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் கூட்டமைப்பு தலைவர் பச்ராஜ் பமல்வா தெரிவித்தார்.கடந்த ஆண்டு அட்சய திருதியை தினத்தன்று இருந்ததை விட, தங்கத்தின் விலை இவ்வாண்டு, 25 சதவீதம் உயர்ந்துள்ளது. அட்சய திருதியையன்று தங்க ஆபரணங்கள் விற்பனை, அளவின் அடிப்படையில், 15 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|