பஞ்சாப் நேஷனல் பேங்க் நிகர லாபம் ரூ.4,433 கோடிபஞ்சாப் நேஷனல் பேங்க் நிகர லாபம் ரூ.4,433 கோடி ... சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தில் பம்ப்கள் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தில் பம்ப்கள் ...
முன்பேர சந்தைகளில் வர்த்தகம் 91 சதவீதம் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மே
2011
00:09

புதுடில்லி: -நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் 1-15ம் தேதி வரையிலான விளைபொருள் முன்பேர வர்த்தக சந்தைகளின் வர்த்தகம், 91 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என, முன்பேர சந்தைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. தங்கம், வெள்ளி, சோயா எண்ணெய், கச்சா எண்ணெய், உ@லாகம், வேளாண் பொருள்கள் மீதான முன்பேர வர்த்தகத்தில், எம்.சி.எக்ஸ்,என்.சி.டீ.ஈ.எக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் @மற்கொண்டு வருகின்றன. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் 1-15ம் தேதி வரை, விளைபொருள் முன்பேர வர்த்தக சந்தைகளின் வர்த்தகம், 5 லட்சத்து 93 ஆயிரத்து 198 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தகத்தை விட, 91 சதவீதம் (3 லட்சத்து 9 ஆயிரத்து 291 கோடி ரூபாய்) அதிகம். தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்கள் மற்றும் வேளாண் பொருள்கள் மீது, அதிகளவில் வியாபாரம் நடைபெற்றுள்ளதால், மொத்த வர்த்தகம் அதிகரித்துள்ளது என, ஆணையம் தெரிவித்துள்ளது. சென்ற ஏப்ரல் 1-15ம் தேதி வரை, தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் மீது, 3 லட்சத்து 29 ஆயிரத்து 216 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில், 1 லட்சத்து 20 ஆயிரத்து 900 கோடி ரூபாயாக இருந்தது.இவை தவிர, தாமிரம் மற்றும் ஈயம் ஆகியவற்றின் மீது 1 லட்சத்து 8 ஆயிரத்து 831 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட, 27 சதவீதம் (85 ஆயிரத்து 862 கோடி ரூபாய்) அதிகம். எரிசக்தி பொருள்கள் மீது, 90 ஆயிரத்து 468 கோடி ரூபாய்க்கு, வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட, 46 சதவீதம் (62 ஆயிரத்து 9 கோடி ரூபாய்) அதிகம்.வேளாண் பொருள்கள் மீது, 64 ஆயிரத்து 681 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது, இதற்குமுந்தைய ஆண்டின் இதே காலத்தை விட, 60 சதவீதம் (40 ஆயிரத்து 520 கோடி ரூபாய்) உயர்வாகும்.நடப்பாண்டு ஏப்ரல் 1-15ம் தேதி வரையிலான காலத்தில், விளைபொருள் முன்பேர வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில், எம்.சி.எக்ஸ். நிறுவனம் 5 லட்சத்து 18 ஆயிரத்து 986 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்துள்ளது.இதை தொடர்ந்து, ஐ.சி.இ.எக்ஸ். நிறுவனம், 8,203 கோடி ரூபாய்க்கும், என்.சி.டி.இ.எக்ஸ். நிறுவனம் 56 ஆயிரத்து 923 கோடி ரூபாய்க்கும், என்.எம்.சி.இ. நிறுவனம் 3,656 கோடி ரூபாய் அளவிற்கும் வர்த்தகம் புரிந்துள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)