பதிவு செய்த நாள்
07 மே2011
10:43
சென்னை : முருகப்பா குழுமத்தின் ஒரு அங்கமான சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் அண்ட் பைனான்ஸ் கம்பெனி லிமிடெட் ( சிஐஎஃப்சிஎல்) நிறுவனம், தங்க நகைக்கடன் வர்த்தகத்தில் களமிறங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த சிஐஎஃப்சிஎல் நிறுவன மூத்த துணை தலைவரும், தலைமை நிதி அதிகாரியுமான அருள்செல்வன் கூறியதாவது, முதற்கட்டமாக, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கேரளா மாநிலங்களில் இதனை அறிமுகப்படுத்த திட்டமி்ட்டுள்ளதாகவும், பின், மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்த உள்ளதாக தெரிவித்தார். அடுத்த 6 மாதங்களில், இதற்கான பலனை நிறுவனம் அனுபவிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த இந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில், வரிகளுக்கு பிந்தைய நிகரலாபம் 61 சதவீதம் அதிகரித்து ரூ. 84.58 கோடியாக அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|