பதிவு செய்த நாள்
07 மே2011
10:06
கொழும்பு : இலங்கையில், வடக்கு யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள கன்சேகன்துறை துறைமுகத்தை மேம்படுத்தும் பணிகளுக்கு இந்தியா உதவி செய்ய உள்ளது. இதுதொடர்பாக, இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இதற்கு, அதிபர் மகிந்தா ராஜப்கேச தலைமையிலான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழர்கள் அதிகமாக வாழும் (?) யாழ்ப்பாணத்தின் வடக்குப் பகுதியில் இந்த துறைமுகம் அமைந்துள்ளது. உள்நாட்டுப் போர் காரணமாக, இந்த துறைமுகம் பல ஆண்டுகாலமாக செயல்படாமல் இருந்தது. தற்போது போர்மேகங்கள் விலகி, அமைதி நிலவி வருவதால், துறைமுகத்தை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட உள்ளதாகவும், இதற்காக இந்தியாவின் உதவியை கோரியிருந்ததாகவும், இந்தியாவும், எங்களுக்கு உதவ ஒத்துக்கொண்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துறைமுகம் மேம்படுத்தப்படுவதன் மூலம், நாட்டின் வர்த்தகம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|